NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை 
    64,000 பேருக்கு இது வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

    உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 01, 2023
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இனமான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் அழிந்துபோகும் நிலையில் இல்லை என்றாலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதலால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்று யுனெஸ்கோ பாரம்பரியக் குழு எச்சரித்துள்ளது.

    அடிக்கடி இந்த பவளப்பாறைகள் வெளுத்து போகும் நிகழ்வுகள் ஏற்பட்டதால், இந்த பாறைகளை அழிந்துபோகும் இனங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு(UNESCO), கடந்த நவம்பர் மாதம் கூறியது.

    ஆனால், தற்போது இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் யுனெஸ்கோ, இந்த பவளப்பாறைகளை காக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது.

    சஜின்

    பவளப்பாறைகள் இருக்கும் இடங்கள் பாரம்பரிய அந்தஸ்தை இழக்க நேரிடும் 

    கிரேட் பேரியர் பவளப்பாறைகளை அழிந்துபோகும் இனங்களின் பட்டியலில் இருந்து விலக்கி வைக்க ஆஸ்திரேலியா முயற்சித்து வருகிறது.

    ஒருவேளை, கிரேட் பேரியர் பவளப்பாறைகள் அழிந்துபோகும் இனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அந்த பவளப்பாறைகள் இருக்கும் இடங்கள் பாரம்பரிய அந்தஸ்தை இழக்க நேரிடும்.

    அதனால், ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்படும். ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் பெரும் இழப்புகள் நேரிடும்.

    இந்த பளப்பாறைகளால் ஒரு ஆண்டிற்கு 6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள்($4 பில்லியன்) வரை வருமானம் ஆஸ்திரேலியாவிற்கு கிடைக்கிறது.

    மேலும், 64,000 பேருக்கு இது வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

    இந்நிலையில், யுனெஸ்கோவின் இந்த முடிவை கேள்விப்பட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் "காலநிலை மாற்றம், நீர் தரம் மற்றும் நிலையான மீன்பிடித்தல் ஆகியவற்றில் 'குறிப்பிடத்தக்க முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025