NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல்
    பாகிஸ்தானின் தோல்வியை ஒப்புக்கொண்டது வாஷிங்டன் போஸ்ட்

    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 15, 2025
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்ட பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர், ஒரு மூலோபாய வெற்றியாகப் பாராட்டப்பட்டது.

    தற்போது இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், இந்த நடவடிக்கை பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் விமானப்படை தளங்களில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.

    ஆரம்பத்தில் மேற்கத்திய ஊடகங்கள் தாக்குதலை பயங்கரவாதமாக ஒப்புக்கொள்ளத் தயங்கினாலும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது.

    தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேற்கத்திய ஊடகங்கள் ஆரம்பத்தில் பஹல்காம் பயங்கரவாதிகளை துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் போராளிகள் என்று குறிப்பிட்டன.

    இருப்பினும், பின்னர் அவர்கள் இந்தியாவின் எதிர் தாக்குதல்களின் வலிமையை தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானுக்கு பேரழிவு கொடுத்த இந்தியா

    தி நியூயார்க் போஸ்ட் இந்தியாவின் வல்லமையையும், பாகிஸ்தானின் தோல்வியையும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும், கடந்த பல தசாப்தங்களில் இந்தியா மேற்கொண்ட மிக வலிமையான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளது.

    இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையோ அல்லது சர்வதேச எல்லையையோ மீறாமல் 11 பாகிஸ்தான் விமானப்படை தளங்களைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயற்கைக்கோள் படங்கள் மற்றும் காட்சி பகுப்பாய்வு மூலம் பாகிஸ்தானின் விரிவான சேதத்தை வெளிப்படுத்தின.

    அதில், மூன்று ஹேங்கர்கள், இரண்டு ஓடுபாதைகள் மற்றும் பல மொபைல் விமானப்படை கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

    பாகிஸ்தானின் மத்திய ராணுவ போக்குவரத்து மையமான இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள நூர் கான் விமானப்படை தளம் உட்பட முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டன.

    1971

    1971க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட விரிவான தாக்குதல்

    கிங்ஸ் கல்லூரி விரிவுரையாளர் வால்டர் லாட்விக் உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, இது இந்தியாவின் ராணுவ நிலைப்பாட்டில் புதிய மாற்றம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது 1971 க்குப் பிறகு பாகிஸ்தானிய உள்கட்டமைப்பின் மீதான மிக விரிவான தாக்குதல்களைக் குறிக்கிறது.

    நகர்ப்புற போர் ஆய்வுகளின் தலைவரான ஜான் ஸ்பென்சர், இந்திய நடவடிக்கையின் துல்லியம் மற்றும் கட்டுப்பாட்டை வலியுறுத்தினார்.

    இது வரம்புகளை மறுவரையறை செய்து மூலோபாய சமன்பாட்டை மாற்றிய ஒரு வரையறுக்கப்பட்ட போர் என்று கூறினார்.

    ஆபரேஷன் சிந்தூர் வெறும் பழிவாங்கலாக மட்டுமல்லாமல், இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கை குறித்த செய்தியை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்
    காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான் பாகிஸ்தான் ராணுவம்
    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா

    ஆபரேஷன் சிந்தூர்

    'மேலும் பஹல்காம் போன்ற தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விளக்கமளித்த இந்திய ராணுவம் இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல் அமெரிக்கா
    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு விமானப்படை
    ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு பிரதமர் மோடி

    இந்தியா

    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா vs பாகிஸ்தான்
    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை பலுசிஸ்தான்

    பாகிஸ்தான்

    போர் மூண்டால் எப்படி அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவிக்கும்? கடந்த கால வரலாறும், தற்போதைய சூழலும் போர்
    உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு டொனால்ட் டிரம்ப்
    இந்திய ராணுவ DGMOக்கு போன் போட்டு போர் நிறுத்தம் கோரிய பாகிஸ்தான் DGMO; வெளியுறவு செயலாளர் தகவல் இந்தியா
    தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி எஸ்.ஜெய்சங்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025