NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம்
    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

    'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 12, 2024
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

    அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரையில் இட ஒதுக்கீடு குறித்து பேசியதற்கு பாஜக கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ராகுல் காந்தி விளக்கம் கொடுத்துள்ளார்.

    அமெரிக்காவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பேசிய ராகுல் காந்தி, "நேற்று யாரோ நான் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்று தவறாகக் கூறினர். 50% வரம்பிற்கு மேல் இடஒதுக்கீட்டை கொண்டு வருவோம்." என்று கூறினார்.

    சர்ச்சைப் பேச்சு

    ராகுல் காந்தியின் சர்ச்சைப் பேச்சின் பின்னணி

    முன்னதாக, செவ்வாயன்று (செப்டம்பர் 10) அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, ​​இந்தியா நியாயமான இடத்தை அடையும் போது மட்டுமே இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும் என்று ராகுல் காந்தி கூறியிந்தார்.

    "நிதி எண்களைப் பார்க்கும்போது, ​​பழங்குடியினருக்கு 100 ரூபாயில் 10 பைசாவும், தலித்துகளுக்கு 100 ரூபாயில் 5 ரூபாயும், ஓபிசியினருக்கு இதே எண்ணிக்கையும் கிடைக்கும்.

    உண்மை என்னவென்றால், அவர்கள் தங்களுக்குரிய நியாயமான பங்கைப் பெறவில்லை என்பதே உண்மை." என்று ராகுல் காந்தி மேலும் கூறினார்.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய அவர், இப்போது இது ஒரு தடுக்க முடியாத யோசனையாக வளர்ந்துள்ளதாகக் கூறினார்.

    ஜனநாயகம்

    இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை

    இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளானதாகவும், ஆனால் தற்போது மீண்டும் போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

    ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மாநிலங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே ஒரு படிநிலையை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார்.

    "இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்பார்கள். இது யூனியன் அல்ல என்கிறார்கள். இவை தனித்தனி விஷயங்கள்" என்று அவர் கூறினார்.

    அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய விஷயங்கள் பாஜக தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைத் தூண்டியுள்ளன. மத்திய அமைச்சர் அமித் ஷா ராகுல் காந்தியின் கருத்துகளை தேச விரோதம் என்று குறிப்பிட்டார்.

    மேலும், தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் இதுபோன்ற அறிக்கைகளை அவர் வழக்கமாக விடுவதாக குற்றம் சாட்டினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    இட ஒதுக்கீடு
    காங்கிரஸ்
    பாஜக

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தி

    மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட இருப்பதாக தகவல்  காங்கிரஸ்
    காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் ராகுல் காந்தி காங்கிரஸ்
    ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மும்பை பயணம் காங்கிரஸ்
    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி  பிரதமர் மோடி

    இட ஒதுக்கீடு

    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா
    அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம், பராக் ஒபாமா வேதனை அமெரிக்கா
    பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் பீகார்
    50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா  கர்நாடகா

    காங்கிரஸ்

    அமித்ஷாவின் வீடியோ வழக்கு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் தெலுங்கானா
    சித்தரிக்கப்பட்ட வீடியோ விவகாரம்: காங்கிரஸை கடுமையாக சாடினார் அமித்ஷா  உள்துறை
    அமேதி, ரேபரேலி வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்க 24 மணி நேரம் கெடு உத்தரப்பிரதேசம்
    ரேபரேலிக்கு ராகுல் காந்தி, அமேதிக்கு கே.எல்.சர்மாவையும் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது ராகுல் காந்தி

    பாஜக

    2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: தமிழகத்தில் பாஜக தோல்விக்கு பிறகு அண்ணாமலை அண்ணாமலை
    "மக்களின் தீர்க்கமான தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது": இண்டியா கூட்டணி கூட்டத்தில் கார்கே பேச்சு  இந்தியா
    மூன்றாவது முறையாக பிரதமராக இருக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து  இந்தியா
    தேர்தல் முடிவுகளை பற்றி சீனா, பாகிஸ்தான், அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டது என்ன? தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025