NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
    இந்த சம்பவங்கள் சில சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கு வழிவகுத்தது

    தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 25, 2024
    03:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்கானிஸ்தானில் டீனேஜ் பெண்கள் மற்றும் இளம் பெண்கள், "மோசமான ஹிஜாப்" அணிந்ததற்காக தாலிபான்கள் தங்களை கைது செய்து, பாலியல் வன்முறை மற்றும் தாக்கியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் செய்தி சேவை, ஜான் டைம்ஸ், இந்த சம்பவங்கள் சில சந்தர்ப்பங்களில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்கு வழிவகுத்தது என்று தெரிவித்துள்ளது.

    தாலிபான் தீவிரவாதிகளால் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அவர் இறப்பதற்கு முன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் குற்றம் சாட்டின.

    தடுப்புகள்

    தாலிபான்களால் பல 'மோசமான ஹிஜாப்' காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா

    டிசம்பர் 2023 மற்றும் ஜனவரி 2024 இல் "மோசமான ஹிஜாப்" அணிந்ததாக ஏராளமான பெண்கள் தாலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    தாலிபான்களின் கருத்துப்படி, ஹிஜாப் அணிந்துள்ள பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்க வேண்டும், தங்கள் கண்களை மட்டும் காட்டும்படி உடை அணிந்திருக்க வேண்டும் என்ற தாலிபான் ஆணையைத் தொடர்ந்து இந்த ஐ.நா அறிக்கை வந்தது.

    இந்த கைதுகள் குறித்து ஐ.நா முன்பு கவலை தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையில், காவலில் இருந்த போது அடிக்கப்பட்ட மற்றும் மிரட்டப்பட்ட அனுபவங்களை பெண்கள் விவரித்துள்ளனர்.

    சாட்சியங்கள்

    பாதிக்கப்பட்டவர்கள் தலிபான் தடுப்புக் காவலின் வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்

    பாதிக்கப்பட்டவர்களில் 16 வயதான சஹ்ரா, டிசம்பர் 2023 இல் மேற்கு காபூலில் உள்ள ஒரு கடையில் கைது செய்யப்பட்டார்.

    ஜஹ்ராவின் தாயார் சோமையா, தனது மகள் விடுவிக்கப்படுவதற்கு முன், இரண்டு வாரங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தினார்.

    வீட்டிற்குத் திரும்பியதும், சஹ்ரா மன உளைச்சலுக்கு ஆளாகி, சாப்பிடவோ பேசவோ மறுத்து, அழுது கொண்டே தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டாதாக அவளின் தாய் கூறியுள்ளார்.

    ஜனவரி 2024 இல் கைது செய்யப்பட்ட 22 வயதான மருத்துவ மாணவி அமினா, தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி, தலிபான் சிறையில் மூன்று இரவுகளைக் கழித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    சோகங்கள்

    தடுப்புக்காவல் அதிர்ச்சி தற்கொலைகளுக்கு வழிவகுக்கிறது

    தடுப்புக்காவலில் அனுபவித்த அதிர்ச்சி சஹ்ராவின் தற்கொலைக்கு வழிவகுத்தது. அவரது தாயார் நள்ளிரவில் அவள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு வழக்கில், 2023 டிசம்பரில் தலிபான்களால் கைது செய்யப்பட்ட 23 வயது பல்கலைக்கழக மாணவி மெரினா சதாத் தற்கொலை செய்துகொண்டார்.

    சதாத்தின் உடல் பின்னர் ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

    அவர் இறப்பதற்கு முன்பு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இந்தச் சம்பவங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மீதான இந்தக் காவலின் கடுமையான மன மற்றும் உடல்ரீதியான உளைச்சலை எடுத்துக்காட்டுகின்றன.

    மறுப்பு

    தாலிபான் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தாலிபான் செய்தித் தொடர்பாளர் "மோசமான ஹிஜாப்" தொடர்பாக செய்யப்பட்ட கைதுகளை மறுத்தார் மற்றும் பல நபர்கள் இருப்பதால் அவர்களின் தடுப்பு வசதிகளில் கற்பழிப்பு சாத்தியமில்லை என்று கூறினார்.

    ஜூன் 30ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐ.நா மாநாட்டில் தாலிபான்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தடுப்புக்காவலில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல்கள் பற்றிய இந்த அறிக்கைகள் வந்துள்ளன.

    இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பெண்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதனால் ஆப்கான் பெண்களின் உரிமைகள் பரவலாக விவாதிக்கப்படாது என்பது வேதனையான விஷயம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்கானிஸ்தான்
    தாலிபான்
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஆப்கானிஸ்தான்

    ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு தாலிபான்
    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 26 பேர் பலி, 40 பேரைக் காணவில்லை வெள்ளம்
    மனித உரிமைக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள விஷயங்களின் பட்டியல் தாலிபான்
    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  பாகிஸ்தான்

    தாலிபான்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் உலகம்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    ட்விட்டருக்கே தான் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கும் தாலிபான் தலைவர் ட்விட்டர்
    ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தான்

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025