NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி 
    400 பேரில் இருந்து 750 பேர் வரை இந்த கப்பலில் பயணித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    அதிக சுமையை ஏற்றி சென்ற மீன்பிடிக்கப்பல் கிரீஸ் கடற்கரையில் கவிழ்ந்து மூழ்கியதால் 79 புலம்பெயர்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான கப்பல் பேரழிவுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

    புதன்கிழமை அதிகாலை எதிர்பாராத இந்த சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

    400 பேரில் இருந்து 750 பேர் வரை இந்த கப்பலில் பயணித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 104 பேர் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த கப்பல் லிபியாவில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.

    cndj

    தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் இரவும் பகலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது

    கப்பலில் இருந்த பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் எகிப்து, சிரியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    தெற்கு கிரீஸின் கடலோர நகரமான பைலோஸுக்கு தென்மேற்கே சுமார் 80-கிமீ தொலைவில் அமைந்துள்ள சிதைவு தளத்தில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் இரவும் பகலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    தப்பிப்பிழைத்தவர்கள் பைலோஸுக்கு அருகிலுள்ள கலாமாடா என்ற கிரேக்க துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் தற்காலிக தங்குமிடமும் வழங்கப்பட்டது.

    இந்த கப்பல் விபத்து சமீபத்திய ஆண்டுகளில் கிரேக்க கடற்கரையில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும்.

    இதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் ஒரு மிகப்பெரும் விபத்து நிகழ்ந்தது. அப்போது புயலின் போது இத்தாலியின் கலாப்ரியன் கடற்கரையில் இருந்த பாறைகளில் படகு மோதியதால் 96-பேர் உயிரிழந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உலகம்

    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலக செய்திகள்
    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! டாடா
    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலகம்
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா
    ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025