NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹஜ் புனித பயணத்தின்போது உயிரிழந்த 645 யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் எனத்தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹஜ் புனித பயணத்தின்போது உயிரிழந்த 645 யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் எனத்தகவல்
    இறப்புக்கான காரணிகளாக இயற்கை முதல் வானிலை வரை என கூறப்பட்டுள்ளது

    ஹஜ் புனித பயணத்தின்போது உயிரிழந்த 645 யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் எனத்தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 20, 2024
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டு மெக்காவில் ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்த 600க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களில் 68 இந்தியர்கள் இருப்பதாக சவுதி அரேபியாவின் தூதரக அதிகாரி ஒருவர் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.

    இறப்புக்கான காரணிகளாக இயற்கையான காரணங்கள் முதல் வானிலை வரை என கூறப்பட்டுள்ளது.

    ஹஜ்ஜின் போது 550 இறப்புகள் பதிவாகியுள்ளதாக செவ்வாயன்று இரண்டு அரபு இராஜதந்திரிகள் AFP க்கு தெரிவித்ததை அடுத்து புதுப்பிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டது.

    இந்த எண்ணிக்கையில் 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர்.

    கிட்டத்தட்ட அனைத்து எகிப்தியர்களும் "வெப்பம் காரணமாக" இறந்ததாக ஒரு தூதர் குறிப்பிட்டார்.

    இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியமும் தங்கள் நாடு பிரஜைகள் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தின.

    உடல்நலக் கவலைகள்

    ஹஜ் யாத்திரையின் போது வெப்பதின் தாக்கம் பற்றிய வழக்குகள் பதிவாகியுள்ளன

    சவூதி அரேபியா இறப்புகள் குறித்த குறிப்பிட்ட தகவல்களை வெளியிடவில்லை.

    ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2,700 க்கும் மேற்பட்ட "வெப்ப" வழக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்திய இறப்புகளை உறுதிப்படுத்திய அநாமதேய தூதர், சில இந்திய யாத்ரீகர்கள் சரியான எண்ணிக்கையை வழங்காததால் அவர்களை காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    "இது ஒவ்வொரு வருடமும் நடக்கும்... இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது என்று கூற முடியாது. இது கடந்த ஆண்டைப் போலவே உள்ளது. ஆனால் வரும் நாட்களில் மேலும் எண்ணிக்கைகள் தெரியவரும்" என்று அவர் கூறினார்.

    சவூதி ஆண்டுதோறும் ஐந்து நாள் புனித யாத்திரைக்காக கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைக்ளிலும் பில்லியன்களை முதலீடு செய்திருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் காரணமாக அனைவரின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பது சவாலானது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியர்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025