NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

    ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 23, 2024
    09:23 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 115 பேர் காயமடைந்தனர்.

    முன்பு 40ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 60ஆக உயர்ந்துள்ளது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    5 குழந்தைகள் உட்பட 115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தெரிவித்தார்.

    18 வயதுக்கு மேல் உள்ள 110 நோயாளிகளில், 60 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமிய அரசு குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

    ரஷ்யா 

    பற்றி எரிந்த கச்சேரி அரங்கம்

    உருமறைப்பு சீருடை அணிந்திருந்த தாக்குதல்காரர்கள் கச்சேரி அரங்கத்திற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டே, வெடிகுண்டுகளையும் தீக்குண்டுகளையும் வீசினர்.

    அந்த அரங்கமே தீப்பிழம்பாகவும் கறுப்பு புகையாகவும் இருப்பதை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன.

    அதன் பிறகு, மூன்று ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

    பல ஆயிரம் பேர் தங்கக்கூடிய அந்த மாபெரும் கச்சேரி அரங்கில் தண்ணீரைக் கொட்டி, தீயை அணைக்க முயற்சிகள் நடந்தன.

    தாக்குதலில் இருந்து தப்பிக்க, மண்டபத்தில் உள்ள இருக்கைகளுக்குப் பின்னால் ஏராளமானோர் மறைந்தனர். பலர், அடித்தளத்திற்கும் கூரையின் நுழைவாயில்களுக்கும் சென்றனர்.

    நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    பயங்கரவாதம்
    துப்பாக்கி சூடு
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    ரஷ்யா

    "அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயம்"- அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை அமெரிக்கா
    364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல் பாகிஸ்தான்
    சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா வட கொரியா
    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு

    பயங்கரவாதம்

    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்
    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை  பாகிஸ்தான்
    இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ரகசிய ஹமாஸ் தளபதி இஸ்ரேல்

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025