NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
    இன்னும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை

    பாங்காக்கில் பள்ளி பேருந்து தீப்பிடித்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 01, 2024
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாய்க்கிழமை புறநகர் பாங்காக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

    பள்ளிப் பயணத்திற்காக உதய் தானி மாகாணத்தில் இருந்து அயுத்யாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ​​பத்தும் தானி மாகாணத்தில் நண்பகல் வேளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதால், இன்னும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று உள்துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார்.

    பதில்

    பிரதமர் இரங்கல்; முழு விசாரணைக்கு உத்தரவு

    பிரதம மந்திரி பேடோங்டார்ன் ஷினவத்ரா தனது இரங்கலை செய்தியை சமூக ஊடக தளமான X இல் வெளியிட்டார்.

    அதில், காயமடைந்தோர் மருத்துவ செலவுகளை அரசாங்கம் ஏற்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

    "ஒரு தாயாக, இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் எழுதினார்.

    சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்கள் படி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​அடர்ந்த கரும் புகையுடன் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிவதைக் காட்டுகிறது. டயர் வெடித்திருக்கக்கூடும் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    விசாரணை

    டயர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

    டயர் வெடித்து, சாலைத் தடுப்புச் சுவரில் வாகனம் உரசியதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, சம்பவ இடத்தில் இருந்த மீட்புக் குழுவினர் கருத்து தெரிவித்தனர்.

    மீட்புக் குழுவான Hongsakul Khlong Luang 21 பேருந்தில் குறைந்தது 10 உடல்களைக் கண்டெடுத்ததாக அறிவித்தது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவ வசதிக்கு அனுப்பப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சூரிய ஜங்ருங்ருங்கிட் உறுதிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    பேருந்துகள்
    தீ விபத்து

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    பள்ளி மாணவர்கள்

    பாடபுத்தகங்களில், 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற NCERT குழு பரிந்துரை  பள்ளிக்கல்வித்துறை
    முதன்முறையாக 'தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு' புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை  பள்ளிக்கல்வித்துறை
    தமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல்  தமிழ்நாடு
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு கோயம்பேடு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  போக்குவரத்து விதிகள்
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  கிளாம்பாக்கம்
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    தீ விபத்து

    சேலம் அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து  சேலம்
    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மாலில் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு  பாகிஸ்தான்
    குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு  குஜராத்
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025