NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது 
    அவர்கள் மீது ஆள் கடத்தல், துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 01, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    20 வயது இந்திய மாணவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை அமெரிக்காவில் உள்ள மிசோரி போலீசார் கைது செய்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட மாணவர், மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்க கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.

    அப்படி அமெரிக்காவுக்கு சென்ற இந்திய மாணவரை, அவரது உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் சேர்ந்து 7 மாதங்களுக்கும் மேலாக சிறைபிடித்து கொடுமை படுத்தி இருக்கின்றனர்.

    சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாணவரை அவர்கள் கழிவறையை பயன்படுத்த கூட அனுமதிக்கவில்லையாம்.

    மேலும், 3 வீடுகளில் வீட்டு வேலை செய்ய அந்த இந்திய மாணவர் வற்புறுத்தப்பட்டிருக்கிறார்.

    அந்த மாணவருக்கு நடந்த இந்த கொடூரம் 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்திருக்கிறது.

    தகவ்க்ஜ்

    எப்படி போலீசாருக்கு இந்த தகவல் தெரிய வந்தது?

    இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அறிந்து கொண்ட ஒரு நபர்(பெயர் வெளியிடப்படவில்லை) இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்.

    தகவல் அறிந்து செயின்ட் சார்லஸ் கவுண்டியில் உள்ள கிராமப்புற நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்ற போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் வெங்கடேஷ் ஆர் சத்தாரு(35)(இந்திய மாணவரின் உறவினர்), ஸ்ரவன் வர்மா பெனுமெட்சா(23) மற்றும் நிகில் வர்மா பென்மட்சா(27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    அவர்கள் மீது ஆள் கடத்தல், துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    டக்ஜ்வ்க்

    இந்திய மாணவர் எப்படி சிறைபிடிக்கப்பட்டார்?

    முதலில், போலீசார் அவர்களது வீட்டுக்கு சென்றதும் அவர்கள் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

    ஆனால், அந்த நேரத்தில் அடித்தளத்தில் இருந்து வெளியே ஓடிவந்த பாதிக்கப்பட்ட மாணவர், காவல்துறையினரிடம் தஞ்சம் அடைந்தார்.

    மாணவர் மீட்கப்பட்ட போது, அவரது உடல் பயத்தில் நடுங்கி கொண்டிருந்ததாகவும், அவரது உடலில் காயங்கள் மற்றும் வீக்கங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வெங்கடேஷ் ஆர் சத்தாரு, "இந்தியாவில் அரசியல் பலத்தை கொண்ட ஒரு மிகப்பெரும் பணக்காரர்" என்று பாதிக்கப்பட்ட மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    எனவே, வெங்கடேஷ் ஆர் சத்தாரு, தனது மாணவர் விசாவிற்கு நிதியுதவி செய்வார் என்று நம்பி அந்த இந்திய மாணவர் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

    டிஜிட்வ்க்

    பாதிக்கப்பட்ட மாணவரை கொடுமைப்படுத்தி லைவ்ஸ்ட்ரீமிங் செய்த கொடூரன்

    கடந்த மாதம், பாதிக்கப்பட்ட மாணவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்ற சத்தாரு, தனது வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தி இருக்கிறார்.

    அதன் பிறகு, சத்தாருவின் ஐடி கம்பெனியில் உள்ள வேலைகளையும் பாதிக்கப்பட்ட மாணவர் செய்திருக்கிறார்.

    அப்போதிலிருந்து, 7 மாதங்களுக்கும் மேலாக தனது வீட்டின் அடித்தளத்தில் பாதிக்கப்பட்ட மாணவரை அடைத்து வைத்த சத்தாரு, அவ்வப்போது ஸ்ரவன் மற்றும் நிகில் ஆகிய இருவரையும் அழைத்து அந்த மாணவரை அடித்து கொடுமை படுத்த சொல்லி இருக்கிறார்.

    பாதிக்கப்பட்ட மாணவர் கதறி அழவில்லை என்றால், இன்னும் பலமாக அடிக்குமாறு கட்டளையிடுவாராம் சத்தாரு.

    இவைகளெல்லாம் ஒரு லைவ்ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரலையாக வெளியிடப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

    டவ்கில்ஜிக்ன்

    மாணவரின் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்த சந்தாரு 

    மேலும், அந்த மாணவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அடித்தளத்தில் கழிப்பறைகள் எதுவும் இல்லை என்றும், அவருக்கு 7 மாதங்களாக உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    நாள் முழுவதும் வேலை இருந்ததால், பாதிக்கப்பட்ட மாணவரால் ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மட்டுமே உறங்க முடிந்ததாம்.

    சத்தாரு எப்போதும் தன்னை கண்காணித்து கொண்டே இருந்ததால் இந்தியாவில் இருக்கும் தனது பெற்றோர்களிடம் கூட உண்மையை கூற முடியவில்லை என்று அந்த மாணவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையில், தனது பாஸ்போர்ட்டையும் அவர்கள் கிழித்து எறிந்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சத்தாருவுக்கு மனைவியும் குழந்தைகளும் வேறு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    அமெரிக்கா

    சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மறுத்த அமெரிக்க நீதிமன்றம் சமூக வலைத்தளம்
    சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா வட கொரியா
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா உலகம்

    இந்தியா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா இந்திய ராணுவம்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்

    உலகம்

    உலகளவில் இந்தியாவில் தான் காசநோய் பாதிப்பு அதிகம்: உலக சுகாதார அமைப்பு இந்தியா
    சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC சீனா
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்  பிரான்ஸ்
    14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து  உலக செய்திகள்

    உலக செய்திகள்

    '2030க்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை உச்சத்தை எட்டும்': சர்வதேச எரிசக்தி நிறுவனம் சர்வதேச எரிசக்தி நிறுவனம்
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு தான் காரணம்: அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    கஜகஸ்தான் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 32 பேர் பலி, 18 பேர் மாயம்  விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025