NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்
    கிழக்கு லிபியா பகுதியில் இருந்த மக்களும் பொருட்களும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன.

    லிபியா: நாட்டையே திருப்பி போட்ட வெள்ளத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 12, 2023
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    லிபியா: கடும் புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, டெர்னா நகரில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தால் குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வட அப்பிரிக்க நாடான லிபியாவில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லிபியாவுக்கு மிக அருகே உள்ள மொராக்கோ நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கிட்டத்தட்ட 2,900 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

    டெர்னா நகருக்கு மேலே உள்ள அணைகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, லிபியாவில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வெள்ளத்தினால், கிழக்கு லிபியா பகுதியில் இருந்த மக்களும் பொருட்களும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன.

    டிஜிவ்ன்

    குறைந்தது 5000 பேர் இந்த வெள்ளத்தால் மாயமாகி உள்ளனர்

    இதனால், லிபியாவின் மிஸ்மாரி நகரில் 5,000-6,000 பொதுமக்கள் மாயமாகி உள்ளனர்.

    டெர்னாவில் மட்டும் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த இறப்பு எண்ணிக்கை 250ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லிபியா, அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது.

    2011 நேட்டோ ஆதரவு எழுச்சிக்கு பின்னர் பல ஆண்டுகளாக அந்நாட்டில் மோதல்கள் நடந்து வருவதால் அங்கு பொது சேவைகள் சிதைந்துள்ளன.

    சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திரிப்போலி அரசாங்கம் கிழக்கு லிபிய பகுதிகளைக் கட்டுப்படுத்தவில்லை.

    எனவே, அப்பகுதிகளில் சரியாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது இன்னும் சரியாக தெரியவரவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மொராக்கோ
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மொராக்கோ

    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள்  உலகம்

    உலகம்

    பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பு  இந்தியா
    காவல்துறையில் சரணடைய உள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  அமெரிக்கா
    6 மாதங்களாக லிபியாவில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட 17 இந்தியர்கள்: என்ன நடந்தது? இந்தியா
    அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம் ஜப்பான்

    உலக செய்திகள்

    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி இத்தாலி
    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு அமெரிக்கா
    ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு அமெரிக்கா
    கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025