NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி
    காயமடைந்தவர்கள் உடனடியாக பிண்டி பட்டியன் மற்றும் பைசலாபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 20, 2023
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதி தீப்பற்றி எரிந்ததால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

    சுமார் 40 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து, டீசல் டிரம்ஸ் ஏற்றிச் சென்ற பிக்-அப் டிரக் மீது மோதி தீப்பிடித்தது.

    பிண்டி பட்டியனுக்கு அருகில் உள்ள பைசலாபாத் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பல பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

    கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, பிண்டி-பட்டியன் இன்டர்சேஞ்ச் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பிக்-அப் டிரக் மீது மோதியது.

    டியூ

    மீட்கப்பட்ட 16 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும்

    காயமடைந்தவர்கள் உடனடியாக பிண்டி பட்டியன் மற்றும் பைசலாபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட 16 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டீசல் ஏற்றிச் செல்லும் லாரியாக அது இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்காது என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) மோட்டார்வே போலீஸ் சுல்தான் கவாஜா கூறியுள்ளார்.

    மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் காபந்து முதல்வர் மொஹ்சின் நக்வி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்! கால்பந்து
    பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!  இந்தியா
    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  உலக செய்திகள்
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  இந்தியா

    உலகம்

    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  மியான்மர்
    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி  சீனா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா
    புதிய முதலீட்டு நிறுவனத்தைத் துவக்கிய ஸ்டீவ் ஜாப்ஸின் மகன் ரீடு ஜாப்ஸ் முதலீடு

    உலக செய்திகள்

    அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து அமெரிக்கா
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? பாகிஸ்தான்
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள் உலகம்
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா மலேசியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025