NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
    ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 27, 2023
    07:22 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் விளையாட்டு அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் மற்றும் கேரள எம்பி ஷஷி தரூர் ஆகியோர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களை சேர்க்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, ஐசிசி மற்றும் பிசிசிஐ அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது.

    இதில் 48 போட்டிகள் மொத்தம் 10 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடரின் முதல் மற்றும் கடைசி போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

    எனினும், இதில் பஞ்சாபின் மொஹாலி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மைதானங்கள் சேர்க்கப்படவில்லை.

    political stir creates in odi world cup

    கிரிக்கெட் தொடரை சர்ச்சையாக்கும் அரசியல்வாதிகள்

    கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான சசி தரூர், திருவனந்தபுரத்தின் ஸ்போர்ட்ஸ் ஹப், இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் ஸ்டேடியம் என்று பலரால் பாராட்டப்பட்டாலும், உலகக் கோப்பை 2023 போட்டிப் பட்டியலில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    "அகமதாபாத் நாட்டின் புதிய கிரிக்கெட் தலைநகராக மாறி வருகிறது. ஆனால் கேரளாவுக்கு ஓரிரு போட்டிகள் கூடவா ஒதுக்கப்படக் கூடாது?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மறுபுறம் பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறுகையில், அரசியல் தலையீடு காரணமாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்களின் பட்டியலில் இருந்து மொஹாலி நீக்கப்பட்டதாகவும், பஞ்சாப் அரசு இந்த விவகாரத்தை பிசிசிஐயிடம் எழுப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    பிசிசிஐ
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஒருநாள் உலகக்கோப்பை

    அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழக்கும் இலங்கை ஒருநாள் கிரிக்கெட்
    44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா கிரிக்கெட்

    பிசிசிஐ

    வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக அலவன்ஸ் தொகையை உயர்த்திய பிசிசிஐ கிரிக்கெட்
    ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன? கிரிக்கெட்
    நடுநிலை மைதானத்தில் இந்தியாவின் ஆசிய போட்டிகள் : பிசிபி தலைவர் நசீம் சேத்தி புதிய தகவல் கிரிக்கெட் செய்திகள்
    சென்னையில் ஐபிஎல் 2023 பிளேஆஃப் போட்டிகள் : அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ ஐபிஎல்

    கிரிக்கெட்

    9 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாடும் விராட் கோலி, எப்படி தெரியுமா? விராட் கோலி
    ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.8.9 கோடி வாங்கும் விராட் கோலி விராட் கோலி
    இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு தனக்கு கிடைக்காதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்
    சென்னை, பெங்களூரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியாவை விட பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானது : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட் கிரிக்கெட்
    இந்திய மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தது பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்
    தொடர்ந்து 26வது முறையாக எதிரணியை ஆல் அவுட் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு வெளியிட்ட ட்வீட்டின் பின்னணி : மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025