டி20 உலகக் கோப்பை: முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்
2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 நிலைகளில் ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்திற்கு எதிராக செயின்ட் வின்சென்ட்டில் நடந்த போட்டியில் வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. மறுபுறம் இந்தியாவிடம் தோற்றதினால், ஆஸ்திரேலியா போட்டி தொடரிலிருந்து வெளியேறியது. ஏனெனில் அவர்கள் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தனர். நேற்றைய போட்டியில் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. முன்னதாக ஆஸ்திரேலியா சூப்பர் 8க்கு வலுவான வடிவத்தில் நுழைந்தது. இருப்பினும், மோசமான பீல்டிங் மற்றும் சில கேள்விக்குரிய யுக்திகள், குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தற்சமயம் அந்த அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.