IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை
அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை (ஏப்ரல் 260 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 81/0 என்று முடித்த இலங்கை, மூன்றாவது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்தது. கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான திமுத் கருணாரத்ன 113 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா 149 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். குசல் மெண்டிஸ் 96 பந்துகளில் 83 ரன்களுடன் களத்தில் உள்ளார். மேலும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 135 ரன்கள் பின்தங்கியுள்ளது.
6,500 ரன்கள் மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே
கருணாரத்னே இது அவரது சொந்த மண்ணில் 11வது சதம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது சதமாகும். இந்த சதத்தின் மூலம் 51.19 சராசரியுடன் சொந்த மண்ணில் 3,430 ரன்கள் அடித்துள்ளார். மேலும், கருணாரத்ன டெஸ்டில் 6,524 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் தற்போது இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இலங்கை வீரர் ஆவார். கருணாரத்னே கடந்த ஆறு இன்னிங்ஸ்களில் ஐந்து ஐம்பது பிளஸ் ஸ்கோர்களை அடித்துள்ளார். முன்னதாக அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 492 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது குறிப்பிடத்தக்கது.