ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்து வரும் ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டியில் வியாழன் அன்று (ஜூன் 15) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி குரூப் ஆட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கள் குழுவில் முதலிடம் பிடித்தது. இந்திய அணியில் ஜோஷ்னா சின்னப்பா 2-7,7-4,3-7,7-5,7-5 என்ற செட் கணக்கில் சடோமி வதனாபேவையும், சவுரவ் கோசல் 7-6,6-7,7-4,3-7,7-5 என்ற செட் கணக்கில் ரியுனோசுகே சுகுவையும் தோற்கடித்தனர். தன்வி கன்னா 7-4,7-1,7-1 என்ற கணக்கில் அகாரி மிடோரிகாவாவை வீழ்த்திய நிலையில் அபய் சிங் 6-7,6-7,2-7 என்ற கணக்கில் டொமோடகா எண்டோவிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.