ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 பிடபிள்யுஎப் சூப்பர் 300 போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 31) காலிறுதியில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை 21-14, 21-17 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். பிவி சிந்து சனிக்கிழமை (ஏப்ரல் 1) இரவு நடைபெறும் அரையிறுதியில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜியா மின்னுடன் விளையாடுகிறார். இதற்கிடையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவிடம் 18-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இந்தியாவின் ஒரே பதக்க வாய்ப்பாக பிவி சிந்து மட்டுமே உள்ளார்.