INDvsPAK : மீண்டும் அதே முறையில் அவுட்; 2022 ஆசிய கோப்பையில் இருந்து பாடம் கற்காத ரோஹித் ஷர்மா
சனிக்கிழமை (செப்டம்பர்2) நடந்த ஆசிய கோப்பை 2023 போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை எளிதாக அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். ஐந்தாவது ஓவரில் ஷாஹீன் அப்ரிடி ஒரு சிறந்த இன்ஸ்விங் பந்து வீச்சில் ரோஹித்தை 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். முன்னதாக, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையிலும், இதேபோல் ஷாஹீன் அப்ரிடியின் இன்ஸ்விங் பந்து வீச்சில்தான் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது அடுத்த ஓவரிலேயே விராட் கோலியையும் 4 ரன்களில் அவுட்டாக்கி ஷாஹீன் அப்ரிடி மிரள வைத்துள்ளார். இதன் மூலம், ஷாஹீன் அப்ரிடி ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஒரே இன்னிங்சில் அவுட்டாக்கிய முதல் வீரர் ஆனார்.