Page Loader
உலகக்கோப்பைக்கு முன் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார கம்பேக்கால் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி
உலகக்கோப்பைக்கு முன் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார கம்பேக்கால் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி

உலகக்கோப்பைக்கு முன் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அபார கம்பேக்கால் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2023
01:45 pm

செய்தி முன்னோட்டம்

ராஜ்கோட்டில் புதன்கிழமை (செப்.27) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது செயல்திறன் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இந்நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ராவின் செயல்பாடு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் பும்ரா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக முன்னேற்றமடைந்து வருவதாகக் கூறினார். முன்னதாக, கிட்டத்தட்ட ஒரு வருடம் காயம் காரணமாக பும்ரா விலகியிருந்த நிலையில், அவர் திரும்பியது இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரிய சாதகமாக உள்ளது மற்றும் ஒரு மோசமான ஆட்டம் அவரை பாதிக்காது என்பதை ரோஹித் ஷர்மா தெளிவுபடுத்தியுள்ளார்.

Rohit Sharma confident about Team India for CWC 2023

உலகக்கோப்பை அணி நிர்வாகம் குறித்து தெளிவான முடிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது அணியின் உலகக்கோப்பை தயாரிப்பில் மிகவும் திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியைப் பற்றி அவரும் அணி நிர்வாகமும் மிகவும் தெளிவாக இருப்பதாக கூறினார். இதற்கிடையே, உலகக்கோப்பைக்கான இந்தியாவின் இறுதி அணி வியாழக்கிழமை (செப்டம்பர் 28) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, அக்சர் படேல் காயமடைந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அஸ்வின் ரவிச்சந்திரன் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.