NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்
    இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்

    இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்க கூடாது என முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 21, 2023
    03:48 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹைப்ரிட் மாடல் முறைக்கு ஒப்புதல் அளித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சை தீர்க்கப்பட்டாலும், இது பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இது குறித்து தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியாண்டட் இது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது மற்றொரு முன்னாள் கேப்டன் இன்டிகாப் ஆலமும் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு விளையாட வந்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு சென்றிருந்தால் அது சிறந்த முடிவாக இருந்திருக்கும் என்றும், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றும் ஆலம் கூறினார்.

    indicop alam requests politicians

    கிரிக்கெட் மட்டுமே பகையை குறைக்கும் என வலியுறுத்திய இன்டிகாப் ஆலம்

    இண்டிகாப் ஆலம் அளித்த பேட்டியில், "எங்கள் அரசியல்வாதிகளுக்கு எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால், அவர்கள் வாள்களை உருவுவதற்குப் பதிலாக, இரு அணிகளையும் விளையாட அனுமதிக்க வேண்டும்.

    கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கட்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளட்டும். அவர்கள் பயணம் செய்யட்டும்" என்று கூறினார்.

    மேலும், "கிரிக்கெட் மட்டுமே பகையைக் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே அன்பையும் நட்பையும் பரப்பும். அதுதான் ஒரே வழி.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எல்லையின் இருபுறமும் உள்ள சிலர் அதை செயல்பட விரும்பவில்லை." எனக் கூறியுள்ளார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும் அரங்குக்கு பெரும் கூட்டத்தை இழுப்பவர்கள் என்றும், இந்த நாடுகள் இல்லாமல் கிரிக்கெட் வாழ முடியாது என்றும் ஆலம் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    ஆசிய கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கிரிக்கெட்

    WTC 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? சாட்ஜிபிடியின் சுவாரஸ்ய பதில் டெஸ்ட் கிரிக்கெட்
    இலங்கை டி20 லீக் ஏலத்தில் பங்கேற்க பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா இலங்கை டி20 லீக்
    விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி விராட் கோலி
    ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள் ஆஷஸ் 2023

    கிரிக்கெட் செய்திகள்

    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தான் கேப்டன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி ஐபிஎல்
    பள்ளிப்பருவ தோழியை கரம் பிடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் துஷார் தேஷ்பாண்டே சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தோற்றதற்கான முதன்மை காரணம் இது தான் டெஸ்ட் கிரிக்கெட்

    ஆசிய கோப்பை

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! இந்திய அணி
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! கிரிக்கெட்
    ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்! இலங்கை கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா! ஹாக்கி போட்டி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்! இந்திய அணி
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட்
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்! கிரிக்கெட் செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025