
ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன்
செய்தி முன்னோட்டம்
2022 டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மீண்டும் இந்திய அணிக்கு அஸ்வின் ரவிச்சந்திரன் கம்பேக் கொடுத்தாலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் அவர் பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த நேர்காணலில் ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து கேட்கப்பட்டதற்கு, இதுபோன்ற எண்ணங்களுக்கு மனதளவில் இடம் கொடுக்க வேண்டாம் என்று நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்ததாகக் கூறினார்.
மேலும், அணியை தேர்ந்தெடுப்பது தனது வேலை அல்ல என்பதால் அதில் கவனம் செலுத்துவதில்லை என்றார்.
பொதுவாக எந்த ஒரு வேலையையும் முடிக்காமல் வைத்திருப்பதில் நம்பிக்கை இல்லை என்றும், தான் அணியில் இல்லாவிட்டாலும், இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ashwin prepares for south africa series
தென்னாப்பிரிக்க தொடரில் கவனம் செலுத்தும் அஸ்வின்
கடந்த காலத்தில் ஓய்வு பெற நினைத்தது குறித்த அஸ்வினின் பழைய கருத்து குறித்தும் இந்த நேர்காணலில் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து தற்போதைய மனநிலை குறித்து பேசிய அஸ்வின், "நீங்கள் இரண்டு விஷயங்களை இணைக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். காயம் காரணமாக நான் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொள்ளவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் என் கிரிக்கெட் வாழ்க்கையை சுற்றி சில நிச்சயமற்ற தன்மை இருந்தது. அதனால் நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இப்போது, நான் நன்றாக பந்துவீசுவதாகவும், பேட்டிங் செய்வதாகவும் உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அடுத்து தென்னாப்பிரிக்க தொடரில் எனது கவனம் உள்ளது." என்றார்.