NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வாரணாசியில் சிவன் வடிவில் கட்டப்படும் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாரணாசியில் சிவன் வடிவில் கட்டப்படும் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டல்
    வாரணாசியில் சிவன் வடிவில் கட்டப்படும் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டல்

    வாரணாசியில் சிவன் வடிவில் கட்டப்படும் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2023
    06:43 pm

    செய்தி முன்னோட்டம்

    வாரணாசியில் வரவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பர் 23) அடிக்கல் நாட்டுகிறார்.

    இதன் மூலம் ஆன்மீக நகரமாக உள்ள வாரணாசி, அதிநவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்ட உடன் கிரிக்கெட் விளையாட்டின் மையமாக மாற உள்ளது.

    இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் 7 ஆடுகளங்களைக் கொண்ட இந்த மைதானத்தின் கட்டுமானத்திற்காக தோராயமாக ரூ.350 கோடி செலவிடப்படும்.

    30,000 பார்வையாளர்கள் கொள்ளளவுடன் இந்த மைதானம் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசி சிவன் கோவிலுக்கு பிரபலம் என்பதால், இந்த மைதானம் சிவனை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    Lord Shiva themed cricket stadium in varanasi

    வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உள்கட்டமைப்பு சிறப்பம்சங்கள்

    வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உள்கட்டமைப்பு முழுவதும் நகரத்தின் சிவ பக்தியை சித்தரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதன்படி, மைதானம் முழுவதும் மேற்கூரை சிவனின் தலையில் உள்ள பிறை வடிவத்தில் இருக்கும். மேலும், ஃப்ளட் லைட்கள் முழுவதும் சிவனின் திரிசூல வடிவத்தில் கட்டமைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இது தவிர, நுழைவாயில் மற்றும் ஓய்வறை சிவபெருமானின் உடுக்கையை ஒத்திருக்கும். அரங்கின் வெளிப்புறம் உலோக சட்டங்களில் மர ஆப்பிள் இலைகளின் பெரிய வடிவங்களைக் கொண்டிருக்கும்.

    இதற்கிடையே, சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பிசிசிஐ நிர்வாகிகள் மட்டுமல்லாது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா? ஆசிய கோப்பை
    PAK vs SL : முகமது ரிஸ்வான் பேட்டிங் அபாரம்; இலங்கைக்கு 253 ரன்கள் இலக்கு ஆசிய கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பைக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம் ஒருநாள் உலகக்கோப்பை
    PAK vs SL : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை ஆசிய கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    முழங்கால் காயம் காரணமாக ப்ரித்வி ஷா கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதம் விலகல் கிரிக்கெட்
    Sports Round Up : இந்திய பேட்மிண்டன் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்; இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ்; வங்கதேசத்திற்கு எதிரான இந்திய அணியில் மாற்றம் எனத் தகவல் விராட் கோலி
    ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள் ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025