
INDvsENG முதல் டெஸ்ட்: 39 ஆண்டுகால கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி
செய்தி முன்னோட்டம்
லீட்ஸின் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அந்த மைதானத்தில் அதிக ரன் குவித்த இந்திய தொடக்க ஜோடி என்ற புதிய சாதனையை படைத்தனர்.
முன்னதாக, 1986 ஆம் ஆண்டு ஹெடிங்லியில் இந்தியாவின் வரலாற்று வெற்றியின் போது சுனில் கவாஸ்கர் மற்றும் கிறிஸ் ஸ்ரீகாந்த் அமைத்த 64 ரன்கள் கூட்டணியை இந்த ஜோடி முறியடித்தது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஜெய்ஸ்வால்-ராகுல் ஜோடி தங்கள் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியது.
இரண்டாவது நிகழ்வு
50 ரன்களைக் கடப்பது இது இரண்டாவது நிகழ்வு
ஹெடிங்லியில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு இந்திய தொடக்க ஜோடி 50 ரன்களைக் கடந்தது இது இரண்டாவது முறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் எந்தவொரு வெளிநாட்டு அணியும் இந்த மைதானத்தில் 12 ஆண்டுகாலக 50க்கும் மேற்பட்ட ரன்களை கூட்டாக குவிக்க முடியாமல் இருந்த நிலையில், அதையும் இதன் மூலம் முறியடித்துள்ளனர்.
கடைசியாக நியூசிலாந்தின் பீட்டர் ஃபுல்டன் மற்றும் ஹமிஷ் ரூதர்ஃபோர்டு ஜோடி 2013 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் 55 ரன்கள் சேர்த்தது.
இதற்கிடையே, போட்டியைப் பொறுத்தவரை, தற்போது இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் மற்றும் ஷுப்மன் கில்லின் அரைசதத்துடன் வலுவாக ரன் குவித்து வருகிறது.