NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IPL 2025 SRH-MI: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு BCCI அஞ்சலி செலுத்துகிறது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    IPL 2025 SRH-MI: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு BCCI அஞ்சலி செலுத்துகிறது
    இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது

    IPL 2025 SRH-MI: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு BCCI அஞ்சலி செலுத்துகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 23, 2025
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 போட்டியின் போது, ​​பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அஞ்சலி செலுத்தும்.

    இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் விவரங்கள்:

    அஞ்சலி விவரங்கள்

    வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவார்கள்

    உயிரிழந்தவர்களின் நினைவாக, போட்டியின் தொடக்கத்தில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்புப் பட்டை அணிந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவார்கள்.

    நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்வில் சியர்லீடர்களைக் கொண்டிருப்பதை பிசிசிஐயும் விரும்பவில்லை.

    உலகத் தலைவர்களும், இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி , ஹார்திக் பாண்ட்யா , கே.எல். ராகுல் மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் சமூக ஊடகங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அஞ்சலியையும் தங்கள் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டதை அடுத்து BCCI அறிவிப்பு வந்துள்ளது.

    கடந்த கால செயல்கள்

    பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிசிஐயின் ஆதரவு

    குறிப்பாக, பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிசிஐ ஆதரவாக நிற்பது இது முதல் முறை அல்ல.

    2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, ஐபிஎல் 12வது சீசனுக்கான தொடக்க விழாவை கிரிக்கெட் அமைப்பு தவிர்த்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பணத்தை நன்கொடையாக வழங்கியது.

    அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணி கேமரூம் தொப்பிகளை அணிந்து அஞ்சலி செலுத்தியது.

    அதே நேரத்தில் 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் எம்.எஸ். தோனி இராணுவ சின்னம் கொண்ட கையுறைகளை அணிந்திருந்தார்.

    போட்டிக்கான ஏற்பாடுகள்

    ஐபிஎல் போட்டிக்கான அஞ்சலி ஏற்பாடுகளை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன

    இன்றைய போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து பிசிசிஐ வட்டாரம் ஒன்று ANI செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.

    "இன்றைய போட்டியில் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கருப்பு கைப்பட்டை அணிய வேண்டும். போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும், மேலும் இன்று சியர்லீடர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், வாணவேடிக்கைகளும் இருக்காது" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடிக்க இந்திய ராணுவமும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறையும் பஹல்காம் பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2025
    பிசிசிஐ
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்
    ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் கண்ணில் மண்ணை தூவி பயங்கரவாத தளங்களை இந்தியா எவ்வாறு தாக்கியது? ஆபரேஷன் சிந்தூர்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்; சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் 2025
    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக யாரும் எட்டாத சாதனை படைத்தார் ஷுப்மன் கில் ஷுப்மன் கில்
    ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது பெரிய சேசிங் வெற்றி; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    ஐபிஎல் 2025

    ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த இந்தியர்; அபிஷேக் ஷர்மா சாதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல்
    ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி பச்சை ஜெர்சியை அணிந்து விளையாடுவது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் எம்ஐvsடிசி: டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல்

    பிசிசிஐ

    2025 சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல்; 2026 டி20 உலகக்கோப்பையும் ஹைபிரிட் முறைக்கு மாற்றம் சாம்பியன்ஸ் டிராபி
    ஜெய் ஷாவின் பதவிக்கு வரப்போவது யார்? புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஜனவரி 12இல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு ஜெய் ஷா
    பார்டர் கவாஸ்கர் டிராபியின் எஞ்சிய போட்டிகளில் முகமது ஷமி விளையாட மாட்டார்; பிசிசிஐ அறிவிப்பு முகமது ஷமி
    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க பிசிசிஐ திட்டம் எனத் தகவல் ஹர்திக் பாண்டியா

    பயங்கரவாதம்

    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு ரஷ்யா
    மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள் ரஷ்யா
    பன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு  இந்தியா
    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025