NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    "கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா?
    இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா

    "கோ-கோ பாதி, கபடி பாதி" : இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு அட்யா பட்யா பற்றி தெரியுமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 05, 2023
    09:00 am

    செய்தி முன்னோட்டம்

    அட்யா பட்யா என்பது தலா ஒன்பது வீரர்களை கொண்ட இரு அணிகளாக விளையாடப்படும் இந்தியாவின் ஒரு பாரம்பரிய விளையாட்டு ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் விளையாடப்படுகிறது.

    இந்த விளையாட்டு பார்ப்பதற்கு கபடி போட்டி மற்றும் கோ-கோ போட்டிகளின் கலவையாக உள்ளது.

    தலா 7 நிமிடங்கள் கொண்ட நான்கு செட்களாக நடத்தப்படும் இந்த போட்டியில், அதிக செட்களை வெல்லும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

    உள்ளூர் அளவில் விளையாடப்பட்டு வந்த இந்த போட்டிக்காக 1982இல் இந்திய அட்யா பட்யா கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

    மேலும் 2013இல் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த கூட்டமைப்பு சார்பாக இந்திய வீரர்கள் தெற்காசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

    indian dominates in atya patya

    அட்யா பட்யா போட்டியில் சர்வதேச அளவில் இந்தியாவின் ஆதிக்கம்

    ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் தெற்காசிய அளவில் இதுவரை நடந்த 7 போட்டிகளிலும் இந்தியாவே சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இந்தியா மட்டுமல்லாது இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கிளித்தட்டு என்ற பெயரில், இந்த போட்டி அதிக அளவில் விளையாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழகத்தை பொறுத்தவரை, 4,000 முதல் 5,000 பேர் இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியாக இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான தேசிய அட்யா பட்யாவின் 36வது சீசனை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள தமிழகம், அடுத்த மூன்று மாதங்களில் போட்டியை நடத்த தயாராகி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கபடி போட்டி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    இந்தியா

    மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி  மகாராஷ்டிரா
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 1 தங்கம் வெள்ளி விலை
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பான்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது 'ட்ரீம் 11' பிசிசிஐ
    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்

    கபடி போட்டி

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி முதல் நாள் போட்டிகளில் அபார வெற்றி ஆசிய சாம்பியன்ஷிப்
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி ஆசிய சாம்பியன்ஷிப்
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் எட்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்தியா இந்திய கபடி அணி
    புரோ கபடி லீக் சீசன் 10க்கான வீரர்கள் ஏல தேதி அறிவிப்பு புரோ கபடி லீக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025