NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2023
    03:16 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹாங்சோவுக்குச் செல்ல அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 உஷூ வீரர்கள் அனுமதிக்கப்படாததற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    அருணாச்சலைச் சேர்ந்த மூன்று வுஷூ வீரர்களான நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு ஆகியோருக்கு ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து அங்கீகார அட்டை வழங்கப்பட்டிருந்தது.

    இது சீனாவுக்கான நுழைவு விசாவாகவும் செயல்படுகிறது. எனினும், புதன்கிழமை (செப்டம்பர் 20) ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தபோது அவர்களது பயண ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

    பின்னரே விஷயம் தெரியவந்த நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் சீனாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து, தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.

    china denies visa for aruchal pradesh sports persons

    அனுமதி மறுப்பை நிராகரித்துள்ள சீனா

    சீனாவின் நடவடிக்கை சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி நெறிமுறைக் குழு தலைவர் வெய் ஜிஜோங், சீனா வீரர்களுக்கு விசா வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.

    மாறாக இந்த விளையாட்டு வீரர்கள் விசாவை ஏற்கவில்லை என்றார்.

    தகுதிச் சான்றிதழ் பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களையும் சீனாவில் போட்டியிட அனுமதிக்கும் ஒப்பந்தம் தெளிவாக உள்ளதால் ஏற்கனவே அனைவருக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது என்று வெய் ஜிஜோங் மேலும் கூறினார்.

    இதற்கிடையே, இதர 10 வுஷூ வீரர்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய விளையாட்டுப் போட்டி
    அருணாச்சல பிரதேசம்
    இந்தியா
    சீனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆசிய விளையாட்டுப் போட்டி

    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணி அறிவிப்பு டென்னிஸ்
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய படகோட்டி அணி அறிவிப்பு இந்திய அணி
    ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்க பிசிசிஐ ஒப்புதல் இந்திய கிரிக்கெட் அணி
    ஆசிய போட்டிகளுக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணி அறிவிப்பு டேபிள் டென்னிஸ்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு அஞ்சலி
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா சீனா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு சீனா

    இந்தியா

    இன்று பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: அவர் கடந்து வந்த பாதை  பிரதமர் மோடி
    'கஸ்தூரி' வர்த்தக அடையாளத்தின் கீழ் இந்திய பருத்தி, மத்திய அரசின் புதிய திட்டம் வணிகம்
    துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதல்
    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள்  பாஜக

    சீனா

    ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஓப்போ
    BYD-யின் 1 பில்லியன் டாலர் முதலீட்டை நிராகரித்தது மத்திய அரசு எலக்ட்ரிக் கார்
    எனக்கே ரெட் கார்டா? நடுவரின் கன்னத்தில் 'பளார்' விட்ட பயிற்சியாளர் கால்பந்து
    15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி ஆன்லைன் மோசடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025