NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி
    ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி

    ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்திய கூடைப்பந்து அணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 18, 2023
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    வியாழன் அன்று (ஆகஸ்ட் 17) சிரியாவின் டமாஸ்கஸில் பஹ்ரைனுக்கு எதிராக நடந்த கூடைப்பந்து போட்டியில் 66-79 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

    இதன் மூலம் ஒலிம்பிக் 2024க்கான ப்ரீ-குவாலிஃபையிங் டோர்னமென்ட் ஆசியா 2023இல் இருந்து இந்தியா தோல்வியுடன் வெளியேறியுள்ளது.

    பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றுக்கு முந்தைய போட்டியான இந்த தொடரில் இந்தியா இரண்டு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் பெற்றுள்ளது.

    இதன் மூலம் ஆறு அணிகள் மோதிய இந்திய போட்டியில் இந்திய அணியால் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது.

    பஹ்ரைன் அணி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து இறுதி ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    indian basket ball team in olympics history

    ஒலிம்பிக்கில் ஒரே ஒருமுறை மட்டுமே பங்கேற்ற இந்திய கூடைப்பந்து அணி

    1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த கோடைக்கால விளையாட்டில் இருந்து கூடைப்பந்து ஒலிம்பிக்கில் ஒரு பதக்க நிகழ்வாக இருந்து வருகிறது.

    இந்திய ஆடவர் கூடைப்பந்து அணியை பொறுத்தவரை ஒலிம்பிக்கில் பங்கேற்க 1980இல் ஒருமுறை மட்டுமே தகுதி பெற்றது. மாஸ்கோவில் நடந்த அந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியால் 12வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

    இந்நிலையில், இந்த முறை தகுதிச் சுற்று போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால், அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    எனினும், சரியான ஃபினிஷிங் இல்லாததால், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூடைப்பந்து
    இந்திய அணி
    ஒலிம்பிக்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கூடைப்பந்து

    ஒலிம்பிக் கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டியில் இந்தோனேசியாவை வீழ்த்தியது இந்தியா ஒலிம்பிக்

    இந்திய அணி

    ஆஸ்திரேலிய 'ஏ' அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் ஹாக்கி அணி! ஹாக்கி போட்டி
    இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்! கிரிக்கெட்
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆசிய கோப்பை
    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை

    ஒலிம்பிக்

    பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி விளையாட்டு
    பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை உலக கோப்பை
    தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்! மத்திய அரசு
    'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025