NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பயன்படுத்திய பிட்சுக்கு 'சராசரி' மதிப்பீட்டை அளித்த ஐசிசி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பயன்படுத்திய பிட்சுக்கு 'சராசரி' மதிப்பீட்டை அளித்த ஐசிசி
    உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பயன்படுத்திய பிட்சுக்கு 'சராசரி' மதிப்பீட்டை அளித்த ஐசிசி

    உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பயன்படுத்திய பிட்சுக்கு 'சராசரி' மதிப்பீட்டை அளித்த ஐசிசி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 08, 2023
    01:08 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2023 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியானது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி மற்றுமொரு கோப்பையை இழந்தது இந்தியா. ஆனால், மறுபுறம் ஐந்தாவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

    இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் பயன்படுத்தப்பட்ட கிரிக்கெட் பிட்சுகளுக்கான மதிப்பீட்டை வழங்கியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.

    அதன்படி, இறுதிப் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட நரேந்திர மோடி மைதானத்தின் பிட்சுக்கு 'சராசரி' (Average) என்ற மதிப்பீட்டை வழங்கியிருக்கிறது ஐசிசி.

    கிரிக்கெட்

    பிற பிட்சுகளுக்கான மதிப்பீடு: 

    நரேந்திர மோடி மைதானத்தின் பிட்ச் மட்டுமின்றி, லீக் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதனத்தின் பிட்ச், சென்னை சேப்பாகம் மைதானத்தின் பிட்ச் மற்றும் லக்னோ மைதான பிட்சுகளுக்கும் சராசரி மதிப்பீட்டையே அளித்திருக்கிறது ஐசிசி.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட முதல் அரையிறுதிப் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தின் பிட்சுக்கு நல்ல (Good) பிட்ச் என்ற மதிப்பீட்டை வழங்கியிருக்கிறது ஐசிசி.

    ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கான பிட்சுக்கும் சராசரி மதிப்பீட்டையே ஐசிசி அளித்திருக்கிறது.

    அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 212 ரன்களை மட்டுமே குவித்திருந்தது. ஆனால், அதனையும் ஆஸ்திரேலிய அணி சிரமப்பட்டே சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    இந்தியா

    சமீபத்திய

    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு

    ஒருநாள் உலகக்கோப்பை

    AUSvsSA Semifinal : மழை தொடர்ந்து போட்டி ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் இதுதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    AUSvsSA Semifinal : ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    India in ODI World Cup Finals: ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன் இந்திய கிரிக்கெட் அணி
    ODI World Cup Prize Money : இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    இதே நாளில் அன்று : கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான் பிராட்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் கிரிக்கெட் செய்திகள்
    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20Iக்கான வானிலை அறிக்கை இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது T20I : ராய்ப்பூர் மைதானத்தின் புள்ளி விபரம் இந்தியா vs ஆஸ்திரேலியா
    India Squad for South Africa Series : தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    இந்தியா: ஒரே நாளில் மேலும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு- 2 பேர் பலி கொரோனா
    தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதல்
    அணுக முடியாத இந்திய தேர்தல் ஆணைய இணையதளம்; எக்ஸில் புகாரளிக்கும் மக்கள் தேர்தல்
    போலி தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமா மெட்டா? சமூக வலைத்தளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025