ஐசிசி டி20 ஐ அணி அறிவிப்பு;கேப்டனானார் சூர்யகுமார் யாதவ்
2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜொலித்த 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்து ஐசிசி சிறந்த கனவு அணி அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடிய பல நாட்டின் வீரர்களில் இருந்து சிறந்த 11 பேரை ஐசிசி தேர்வு செய்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரண், மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பெஸ் ரம்ஜானி, மார்க் அடைர், ரவி பிஷ்னாய், ரிச்சர்ட் நிங்கரவா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.