Page Loader
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்
கபில்தேவ் உடன் அன்ஷுமான் கெய்க்வாட் pc: இந்தியா டுடே

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 01, 2024
08:27 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெவ்காட் தனது 71 வயதில் காலமானார். அவருக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அதற்காக அவர் நீண்ட காலமாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ESPNcricinfo வின்படி, பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் காரணமாக சில நாட்கள் ICUவில் இருந்தவர், நேற்று இரவு பரோடாவில் காலமானார். அன்ஷுமான் கடந்த மாதம் வரை லண்டனில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரோடாவில் உள்ள பைலால் அமீன் பொது மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்

இரங்கல்

ஜெய் ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எக்ஸ்-இல் தனது இரங்கலைத் தெரிவித்தார். "திரு அவுன்ஷுமான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஒட்டுமொத்த கிரிக்கெட் சகோதரத்துவத்திற்கும் இதயத்தை உடைக்கும் செய்தி இது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று ஜெய் ஷா கூறினார். கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மோடி மேலும் கூறுகையில், அவர் திறமையான வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளர் என்றார்.

புள்ளிவிவரங்கள்

கெய்க்வாட்டின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் 

கெய்க்வாட் 40 டெஸ்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் 30.07 சராசரியில் 1,985 ரன்கள் எடுத்தார். அவர் இரண்டு சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் விளாசினார். அவர் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 20.69 சராசரியில் 269 ரன்கள் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 78* ஆகும். 206 முதல் தர போட்டிகளில், கெய்க்வாட் 34 சதங்கள் 47 அரைசதங்கள் உதவியுடன் 12,136 ரன்கள் குவித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 1,601 ரன்களையும் எடுத்தார். கெய்க்வாட் 1997 மற்றும் 2000க்கு இடையில் இரண்டு வெவ்வேறு நிலைகளில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவர் சச்சின் டெண்டுல்கர் காலத்தில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மீபத்தில் பிசிசிஐ கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்காக 1 கோடி ரூபாய் அளித்தது.