
பெங்களூர் சம்பவத்திலிருந்து பாடம் கற்ற பிசிசிஐ; ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு விதிமுறைகளை வகுக்க முடிவு
செய்தி முன்னோட்டம்
ஜூன் 4 ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் பட்டத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்களின் போது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜூன் 14ஆம் தேதி உச்ச கவுன்சில் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் மற்றும் விதிமுறைகளை வகுப்பதன் அவசியம் குறித்த விவாதம்" என்ற தலைப்பு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
முன்னதாக, எம் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நடந்த இந்த சம்பவம், மோசமான திட்டமிடல் குறித்து கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
கூட்ட நெரிசல்
கூட்ட நெரிசலுக்கான காரணம்
போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த போதிலும், ஆர்சிபியின் அறிவிப்பு வந்தது.
இதைக் காண இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடினர். பேரணி ரத்து செய்யப்பட்டாலும், கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டது கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது.
கர்நாடக அரசு ஆர்சிபி மற்றும் பிசிசிஐ ஆகிய இரு தரப்பினரும் முறையான அனுமதிகளைப் பெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டியுள்ளது.
முன்னதாக, பிசிசிஐ தவறான நிர்வாகத்தைக் கண்டித்திருந்தாலும், நிகழ்வின் ஏற்பாட்டிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.