LOADING...
'மஹி பாய்க்கு நன்றி': முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு
"விரைவில் மீண்டும் உங்களை சந்திக்கவும் விளையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்"

'மஹி பாய்க்கு நன்றி': முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
May 03, 2024
05:59 pm

செய்தி முன்னோட்டம்

சிஎஸ்கே அணியினை சேர்ந்த வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான், எம்.எஸ் தோனியிடம் இருந்து கையொப்பமிடப்பட்ட ஜெர்சியைப் பெற்றுக்கொண்டு இந்த IPL தொடரிலிருந்து விடைபெற்றார். முஸ்தஃபிசுர் ரஹ்மானின் தேசிய அணி போட்டிகளின் காரணமாக அவரது விளையாட்டு சீக்கிரத்தில் முடிவுக்கு வந்தது. பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் அவர் இடம்பெற்றிருப்பதால், மே 1, 2024க்குப் பிறகு சிஎஸ்கே அணியில் அவர் இடம் பெறமாட்டார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முஸ்தஃபிசுர் தனது சமூக ஊடகத்தில் எம்.எஸ்.தோனியுடன், அவர் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியைப் பிடித்துக் கொண்டு ஒரு போட்டோவை பகிர்ந்து கொண்டார்.

embed

முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு

Thanks for everything Mahi bhai. It was a special feeling to share the same dressing room with a legend like you. Thanks for keeping faith in me everytime. Appreciating your valuable tips, I will remember those things. Looking forward to meeting and playing with you again soon. pic.twitter.com/xEN9TYY9x1— Mustafizur Rahman (@Mustafiz90) May 3, 2024

வெளியேறியதன் காரணம் 

முஸ்தாபிஸூர் ஏன் சிஎஸ்கே மிட்-வேயை விட்டு வெளியேறினார்?

வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி20 தொடருக்காக முஸ்தாபிசுர் தனது நாட்டிற்கு திரும்புவதற்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது. இருப்பினும், மே 1 புதன்கிழமை சென்னை எம் சிதம்பரம் ஸ்டேடியத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான சிஎஸ்கேயின் போட்டி காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. சென்னை அணி மற்றும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று வங்கதேச வாரியமும் அவரின் காலக்கெடுவை நீட்டித்தது. முஸ்தாபிஸூர் ஐபிஎல் 2024 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். 9 போட்டிகளில், வேகப்பந்து வீச்சாளர் 9.26 என்ற பொருளாதாரத்தில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.