NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    அனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்கும் மத்திய அரசு

    அனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 19, 2024
    06:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (ஏவிஜிசி-எக்ஸ்ஆர்) ஆகியவற்றிற்கான நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (என்சிஓஇ) நிறுவனத்தை லாப நோக்கமற்ற நிறுவனமாக நிறுவ மத்திய அமைச்சரவை புதன்கிழமை (செப்டம்பர் 18) ஒப்புதல் அளித்தது.

    இதற்காக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஃபார் இம்மர்சிவ் கிரியேட்டர்ஸ் (ஐஐஐசி) என அழைக்கப்படும் மையங்கள் உருவாக்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போது கூறினார்.

    பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சிகளை எட்ட புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று வைஷ்ணவ், நாட்டில் வளர்ந்து வரும் படைப்பாளி பொருளாதாரம் பற்றி பேசுகையில் கூறினார்.

    நோக்கம்

    ஐஐஐசி கட்டமைக்கப்படுவதன் நோக்கம்

    இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவை மத்திய அரசுடன் இணைந்து இந்த நிறுவனத்தை கட்டமைக்கும் எனத் தெரிகிறது.

    முன்மொழியப்பட்ட தேசிய மையம் நாட்டில் ஏவிஜிசி-எக்ஸ்ஆர் சுற்றுச்சூழல் அமைப்பைத் தொகுத்து, அமெச்சூர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் கற்றல் திட்டங்களை வழங்கும்.

    உள்நாட்டு மற்றும் உலகளாவிய நுகர்வுக்கு இந்திய வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தும் இந்திய அறிவுசார் சொத்துக்களை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

    மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கு உள்கட்டமைப்பு, முறையான திறன் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொடுக்கும் இடமாகும் இது திகழும்.

    ஐஐஐசி

    நிறுவனத்தின் பெயர் அறிவிப்பு

    இந்த நிறுவனத்திற்கு தற்போது ஐஐஐசி என தற்காலிகமாக பெயர் வைத்திருந்தாலும், 2025 பிப்ரவரியில் நடைபெறும் வேவ்ஸ் உச்சி மாநாட்டின் போது முறையான பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாடு (வேவ்ஸ்) என்பது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முதல் உச்சிமாநாடு ஆகும்.

    வேவ்ஸ் முதலில் கோவாவில் நவம்பர் 20 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பின்னர் டெல்லியில் பிப்ரவரி 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது. ​​

    ஊடகம் மற்றும் பொழுதுபோக்கில் திறமையானவர்களை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஒரு பல்கலைக்கழகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    உயர்கல்வித்துறை
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மத்திய அரசு

    பணத்திற்கு ATM தெரியும், அரிசி ஏடிஎம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எப்படி வேலை செய்கிறது ஹரியானா
    எஸ்டி/எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டுவர மாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு இட ஒதுக்கீடு
    ஒளிபரப்பு மசோதாவின் புதிய வரைவை வெளியிடவுள்ள மத்திய அரசு: விதிகளை திருத்த வாய்ப்பு இந்தியா
    சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு தேசிய கொடியை என்ன செய்ய வேண்டும்; விரிவான வழிகாட்டுதல் சுதந்திர தினம்

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி ஆர்.என்.ரவி

    தொழில்நுட்பம்

    அபரிமிதமான வளர்ச்சி; மூன்றாவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்
    ரேடியோ சிக்னல்களில் இருந்து ஆற்றலை சேகரிக்கும் பேட்டரி இல்லாத தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர் தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் ஆண்ட்ராய்டு 4.0 மற்றும் ஐஓஎஸ் 11க்கு முந்தைய மாடல்களுக்கு சிக்கல்  வாட்ஸ்அப்
    மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி கொடுக்கும் நிறுவனங்கள்; பின்னணி என்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு தொழில்நுட்பம்
    தொழில்நுட்ப உலகில் புரட்சி; புதிய குவாண்டம் இணையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டன்
    குரோம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை இப்போது டிப் செய்யலாம் கூகுள்
    உலகளாவிய கணினி செயலிழப்பிற்கான காரணத்தை வெளியிட்டது கிரவுட்ஸ்ட்ரைக் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025