NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு
    டெலிகிராம் செயலியில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து மத்திய அரசு விசாரணை

    டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 26, 2024
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    டெலிகிராம் செயலியில் நடைபெறும் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் சூதாட்டம் போன்ற குற்றச் செயல்கள் குறித்த கவலைகள் காரணமாக மத்திய அரசு தற்போது அந்த செயலி குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மணிகண்ட்ரோல், அரசு அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் முடிவைப் பொறுத்து, இந்தியாவில் டெலிகிராம் தடைசெய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

    டெலிகிராமின் செயல்பாடுகள் மீதான விசாரணை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது.

    இணக்க நிலை

    தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு டெலிகிராமின் இணக்கம் மற்றும் விசாரணையில் உள்ள சவால்கள்

    டெலிகிராம் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்குவதால், தற்போதைய விசாரணை தகவல் தொழில்நுட்ப விதிகளுடன் தொடர்புடையது அல்ல என்று அதிகாரி தெளிவுபடுத்தினார்.

    இருப்பினும், இந்தியாவில் டெலிகிராம் அலுவலகம் இல்லாததால் சிரமங்கள் எழுந்துள்ளன. இது நிறுவனத்துடனான நேரடியான தகவல்தொடர்புகளை சிக்கலாக்குகிறது மற்றும் பயனர் தரவைக் கோருவதற்கான முயற்சிகளைத் தடுக்கிறது என்றும் இது விசாரணையை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    சமீபத்திய சர்ச்சையில், யுஜிசி-நீட் வினாத்தாள் கசிவு ஊழலில் டெலிகிராம் சிக்கியது. வினாத்தாள் டெலிகிராமில் ₹5,000 முதல் ₹10,000 வரை விற்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

    இதற்கிடையே, டெலிகிராமின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ் ஆகஸ்ட் 24 அன்று பாரிஸில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெலிகிராம்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

    டெலிகிராம்

    பயனாளர் பெயரைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி.. விரைவில் அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    இப்போது டெலிகிராம் பிரீமியம் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது; ஆனால்..  தொழில்நுட்பம்
    'சாரு யாரு..தாராள பிரபு டோய்': டெலிகிராம் CEOக்கு 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உலகம்
    டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்ஸ் நாட்டில் கைது; பின்னணி என்ன? பிரான்ஸ்

    தொழில்நுட்பம்

    மத்திய பட்ஜெட் 2024: 100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்கவிருப்பதாக அறிவிப்பு பட்ஜெட் 2024
    Intel அதன் 13th-gen மற்றும் 14th-gen CPUகள் ஏன் செயலிழக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது தொழில்நுட்பம்
    பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் AI தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு
    IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    உங்கள் சமயலறையில் குக்கிங்-இற்கு ஹெல்ப் செய்ய வந்துவிட்டது எம்ஐடியின் புதிய ரோபோ  அமெரிக்கா
    மோசமாகும் இன்டெல்லின் CPU நெருக்கடி: அதிகமான மாதிரிகள் பாதிப்பு தொழில்நுட்பம்
    பிரைன் சிப் விஷன் ப்ரோவை எண்ணங்களுடன் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது தொழில்நுட்பம்
    Spotify இல் வரம்பற்ற பாடல் வரிகளை மீண்டும் இலவசமாக அணுகலாம் தொழில்நுட்பம்

    மத்திய அரசு

    நீட், யுஜிசி நெட் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமலுக்கு வந்தது தேர்வு மோசடிக்கு எதிரான சட்டம்  நீட் தேர்வு
    ஜிஎஸ்டி மூலம் இந்திய அரசாங்கத்திற்கு ரூ.70,000 கோடி வசூல்  ஜிஎஸ்டி
    நீட் முறைகேடு விவகாரம்: பொது தேர்வு செயல்முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய உயர்மட்ட குழுவை நியமித்தது மத்திய அரசு  நீட் தேர்வு
    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025