NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா
    நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா

    நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 11, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    சந்திரனின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற சாதனையை நிகழ்த்தும் நோக்கதுடனும், பிற அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டங்களுடனும் கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது இஸ்ரோ.

    தற்போது, இந்தியாவிற்குப் போட்டியாக லூனா 25 (Luna 25) என்ற ஆய்வுக் கலனை நிலவிற்கு அனுப்பியிருக்கிறது ரஷ்யா. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2.11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 4.41 மணி) சோயஸ் 2.1v ராக்கெட் மூலம் இந்த விண்கலனை விண்ணில் செலுத்தியிருக்கிறது ரஷ்யா.

    1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பிறகு, நிலவிற்கு நோக்கிச் செயல்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் முதல் திட்டம் இது தான்.

    லூனா 25

    எப்போது லூனா 25 நிலவைச் சென்றடையும்? 

    தற்போது விண்ணில் ஏவப்பட்டிருக்கும் லூனா 25 ஆனது அடுத்த 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்துவிடும் எனத் தெரிவித்திருக்கிறது ரஷ்யா.

    அதன் பிறகு, ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தபடியே, தரையிறங்குவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்திற்காகக காத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    முன்னர், இந்தியாவின் சந்திராயன் 3 தரையிறங்கும் நாளா அதே ஆகஸ்ட் 23-ம் தேதியே தங்களது லூனா 25 ஆய்வுக் களத்தையும் தரையிறக்கத் திட்டமிட்டிருந்தது ரஷ்யா. ஆனால், தற்போது அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 21-ம் தேதி விண்கலத்தை தரையிறக்க முடிவு செய்திருக்கிறது ரஷ்யா.

    லூனா 25வை தரையிறக்குவதற்கு நிலவின் தென்துருவத்தில் மூன்று இடங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நாடு.

    ட்விட்டர் அஞ்சல்

    ரஷ்யாவின் லூனா 25 திட்டம்:

    Russia launches Luna-25 mission to Moon, its first lunar lander in 47 years 

    Read @ANI Story | https://t.co/FQBzV9HJJm#Russia #Luna25 #Moon pic.twitter.com/1nKK0s411Z

    — ANI Digital (@ani_digital) August 11, 2023

    ரஷ்யா

    எதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது ரஷ்யா? 

    நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள சில பள்ளத்தாக்குப் பகுதிகளில், பனிக்கட்டிகளாக தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்காவும், உலகின் பிற விண்வெளி அமைப்புகள் சிலவும் சமீபத்தில் கண்டறிந்தன.

    அந்தத் தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு செய்யவே இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது ரஷ்யா. இந்த லூனா 25 ஆய்வுக் கலமானது ஓர் பூமி ஆண்டுகள் நிலவில் இருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. சந்திரயான் 3யானது இரண்டு பூமி வாரங்கள் மட்டுமே அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    நிலவின் தரைப்பகுதியை 15 செமீ வரை குடைந்து, அதன் பாறை மற்றும் மண் மாதிரிகளை எடுத்து, தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவிருக்கிறது லூனா 25.

    சந்திரன்

    நிலவிற்கு செல்லத் திட்டமிடும் உலக நாடுகள்: 

    கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உலக நாடுகளில் நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. நிலவின் பூமத்திய ரேகையின் அருகே, அறிவியல் ஆய்வுக் கலன்கள் செயல்படுவதற்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில், அங்கேயே பல்வேறு நாடுகள் தங்கள் விண்கலங்களை அனுப்பியிருக்கின்றன.

    ஆனால், தற்போது நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்வதில் உலக நாடுகளைச் சேர்ந்த விண்வெளி அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

    2019-ம் ஆண்டு மட்டும், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த நிலவுத் திட்டங்கள் தோல்வியைத் தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷ்யா

    நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் இறங்கும் ரஷ்யா: 

    கடைசியாக 1976-ம் ஆண்டு சோவியத் யூனியனாக இருந்த போது நிலவு திட்டம் ஒன்றை செயல்படுத்தியது ரஷ்யா. அதன் பிறகு, 47 ஆண்டுகள் கழித்து தற்போது தான் புதிய திட்டம் ஒன்றை அந்நாடு செயல்படுத்தியிருக்கிறது.

    அதுவும், உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக உலக நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு தடைகளை விதித்திருக்கும் இந்த நேரத்தில், பிற நாடுகளின் உதவியின்றி விண்வெளித் திட்டம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது ரஷ்யா.

    தன்னிச்சையாக தங்களால் விண்வெளித் திட்டத்தை செயல்படுத்த முடியும் என உலக நாடுகளுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ரஷ்யா. எனவே, இந்தத் திட்டத்தின் வெற்றி அந்நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ரஷ்யா நிலவின் லூனா 25 திட்டம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்திருக்கும் இஸ்ரோ:

    Congratulations, Roscosmos on the successful launch of Luna-25 💐

    Wonderful to have another meeting point in our space journeys

    Wishes for
    🇮🇳Chandrayaan-3 &
    🇷🇺Luna-25
    missions to achieve their goals.

    — ISRO (@isro) August 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    விண்வெளி
    சந்திரன்
    சந்திரயான் 3

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ரஷ்யா

    ரஷ்ய அதிபர் பேசி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உலகம்
    உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி இந்தியா
    உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா உக்ரைன்
    ஸ்புட்னிக் V தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கழுத்தை நெரித்து கொலை உலகம்

    விண்வெளி

    45,000 நட்சத்திர மண்டலங்கள், ஒரே புகைப்படத்தில்.. ஜேம்ப்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய சாதனை! தொழில்நுட்பம்
    செவ்வாய் கிரகத்தில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகின்றனர்? நாசா
    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா நாசா
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி
    சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இஸ்ரோ

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025