Page Loader
OpenAI இன் ChatGPT ஏஜெண்டை உருவாக்கிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர் யாஷ் குமார்
யாஷ் குமார் ஐஐஐடி ஹைதராபாத்தில் கணினி அறிவியல் பயின்றார்

OpenAI இன் ChatGPT ஏஜெண்டை உருவாக்கிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர் யாஷ் குமார்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2025
11:40 am

செய்தி முன்னோட்டம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரும் OpenAI- யின் தொழில்நுட்ப ஊழியர்களில் ஒருவருமான யாஷ் குமார், நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பான ChatGPT ஏஜெண்டை உருவாக்குவதில் முக்கிய நபராக பணியாற்றியுள்ளார். இந்த அதிநவீன கருவி, பயனர்களுக்கு கணினி சார்ந்த பல்வேறு பணிகளைச் செய்ய முடியும். இதில் தானாக காலெண்டர்களை நிர்வகித்தல், ஆன்லைன் ஷாப்பிங், திருத்தக்கூடிய விளக்கக்காட்சிகள் மற்றும் ஸ்லைடுஷோக்களை உருவாக்குதல் மற்றும் குறியீட்டை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். The Verge உடனான சமீபத்திய டெமோவின் போது, குமார் மற்றும் ஆராய்ச்சித் தலைவர் இசா ஃபுல்ஃபோர்ட் இந்த புரட்சிகரமான கருவியின் திறன்களைக் காட்சிப்படுத்தினர்.

கருவி திறன்கள்

ChatGPT ஏஜென்ட் 'ஒரு முழு கணினியையும்' அணுக முடியும்

ChatGPT முகவர், வெறும் பிரவுசரை மட்டுமல்ல, "முழு கணினியையும்" அணுகக்கூடியது என்று குமார் விளக்கினார். இது ஓபன்ஏஐ-இன் முந்தைய கருவிகளான Operator மற்றும் Deep Research போன்றவற்றிலிருந்து பல்வேறு செயல்பாடுகளின் கலவையாகும். ChatGPT ஏஜென்ட், "கடினமான பணிகளை" மேம்படுத்துவதன் மூலம் பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. "15 நிமிடங்கள், அரை மணி நேரம் எடுத்தாலும், அதைச் செய்ய நீங்கள் எடுக்கும் நேரத்தை விட இது மிக துரிதம்" என்று ஃபுல்ஃபோர்ட் கூறினார்.

கல்வி வரலாறு

யாஷ் குமாரின் கல்விப் பின்னணி மற்றும் OpenAI-இல் அவரது தொழில் வாழ்க்கை

இந்தியாவைச் சேர்ந்த குமார், இந்தியாவின் சிறந்த பொறியியல் நிறுவனங்களில் ஒன்றான ஐஐஐடி ஹைதராபாத்தில் கணினி அறிவியல் பயின்றார். அவர் நவம்பர் 2023இல் ஓபன்ஏஐ-யில் சேர்ந்தார். இப்போது நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தில் பணிபுரிகிறார். அதற்கு முன்பு, குமார் கூகிளில் மென்பொருள் பொறியாளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, ஸ்க்ராட்ச்சில் பொறியியல் தலைவராகவும், DoorDash-ல் இயக்குநராகவும் தலைமைப் பதவிகளைப் வகித்தார்.