NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்

    OTP இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் இழந்த பெங்களூரு பெண்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 25, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    டிஜிட்டல் வகையில் பல்வேறு வழிகளிலும் நம்முடைய பணத்தைத் திருட மோசடி நபர்கள் சுற்றி வரும் நிலையில், நம்முடைய பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

    OTP மற்றும் லிங்க்குள் எதுவுமின்றி பெங்களூருவிலிருக்கும் பெண் ஒருவரின் டிஜிட்டல் 'வாலட்டில்' இருந்து ரூ.1 லட்சம் பணத்தை மோசடி நபர்கள் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

    தான் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்யவில்லை, யாருடனும் OTP-யை பகிர்ந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் அந்தப் பெண். பிறகு எப்படி அந்தப் பெண்ணில் 'டிஜிட்டல் வாலட்டி'ல் இருந்த பணத்தை மோசடி நபர்களால் கொள்ளையடிக்க முடிந்தது?

    ஆன்லைன் மோசடி

    புதிய வகையில் ஆன்லைன் மோசடி: 

    அந்தப் பெண் காரில் வந்து கொண்டிருக்கும் போது, புதிய எண் ஒன்றில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதனை எடுத்து அவர் பேசிய போது, தான் ஒரு பட்டய கணக்காளர் என்றும், அந்தப் பெண்ணுடைய அப்பாவின் நண்பர் என்றும் கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து, அவருடைய அப்பா அந்தப் பெண்ணில் கணக்கிற்கு குறிப்பிட்ட அளவு பணத்தை அனுப்பச் சொல்லியிருக்கிறார் என்றும், அதற்கு அந்தப் பெண்ணின் யுபிஐ ஐடி தேவை என்றும் கேட்டிருக்கிறார்.

    அந்தப் பெண்ணும் தன்னுடைய யுபிஐ ஐடியைப் பகிர, போன்பே மூலம் அந்த ஐடியில் பணம் செலுத்தப்பட்டுவிட்டதாகக் போன்பே மூலமாகவே குறுஞ்செய்தியாகப் கூறியிருக்கிறார் அந்த மோசடி நபர்.

    பெங்களூரு

    ரூ.1 லட்சம் மோசடி: 

    மேலும், போன்பேயில் பணம் அனுப்பியிருப்பதாகக் கூறி, சரிபார்க்கச் சொல்லி அந்தப் பெண்ணை வற்புறுத்தியிருக்கிறார் அந்த நபர்.

    அப்படி சரி பார்க்கும் போது தான், அந்தப் பெண்ணில் வாலட்டிலிருந்து இரண்டு முறை ரூ.25,000-மும், ஒருமுறை ரூ.50,000 பணமும் எடுக்கப்பட்டிருக்கிறது, அதுவும் OTP எதுவுமே இல்லாமல்.

    அந்தப் பெண் அளித்த தகவல்களின்படி, பணம் வந்து விட்டதா என மோசடி நபர் சரிபார்க்க வற்புறுத்தும் போது, போன்பேயில் தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை அந்தப் பெண்ணை கிளிக் செய்ய வைத்திருக்கிறார். அதன் மூலமே அந்தப் பெண்ணின் பணத்தை திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது குறித்து அந்தப் பெண் பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    பெங்களூர்

    சமீபத்திய

    CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! சிபிஎஸ்இ
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    தொழில்நுட்பம்

    பார்டு சாட்பாட்டில் 'நினைவு கொள்ளும்' புதிய வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்
    ஜிமெயிலின் 'அடிப்படை HTML' வசதியை நிறுத்துகிறது கூகுள் கூகுள்
    தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதைக் குறைக்க கூகுள் புதிய நடவடிக்கை கூகுள்
    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்? வணிகம்

    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கருவிகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தவிருக்கும் அடோப் தொழில்நுட்பம்
    நிலநடுக்கத்தைக் கண்டறியும் AI வழிமுறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு
    இலவச பயனாளர்களுக்கான வசதிகளைக் குறைக்கும் ஸ்பாட்டிஃபை வணிகம்
    சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள் அமெரிக்கா

    பெங்களூர்

    பெங்களூரில் உத்தியான் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ரயில்கள்
    F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம் எலக்ட்ரிக் பைக்
    இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025