NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது
    நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது

    நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 25, 2023
    05:19 pm

    செய்தி முன்னோட்டம்

    நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'க்ரூ-7' (Crew-7) திட்டமானது இன்று செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நாளை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எதற்காக தள்ளி வைக்கப்பட்டது என்பது குறித்த காரணம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

    இத்திட்டத்தின் கீழ், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளின் விண்வெளி அமைப்புகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார்கள்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில், தொடர்ந்து சர்வதேச விண்வெளியில் நிலையத்தில் உள்ள வீரர்களை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், ஏழாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை தங்கள் விண்கலம் மூலம் அழைத்துச் செல்கிறது ஸ்பேஸ்எக்ஸ்.

    விண்ணில் ஏவுவதற்காக ராக்கெட்டும், திட்டக் குழுவினரும் திட்டத்திற்குத் தயாராக இருப்பதாகவே தெரிவித்திருக்கின்றன நாசாவும், ஸ்பேஸ்எக்ஸும்.

    ஸ்பேஸ்எக்ஸ்

    எப்போது செயல்படுத்தப்படவிருக்கிறது? 

    இந்திய நேரப்படி நாளை நண்பகல் 12.57 மணிக்கு செயல்படுத்தப்படவிருக்கிறது க்ரூ-7 திட்டம். ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலத்தின் உதவியுடன், விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையவிருக்கின்றனர்.

    க்ரூ-7 விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தை அடைந்து 5 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் அங்கு சென்ற க்ரூ-6 திட்டக் குழு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவிருக்கிறார்கள்.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில், 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தொழிநுட்ப செயல் விளக்கங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது க்ரூ-7 குழு. நாளை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது ஃபால்கன் 9.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    விண்வெளி

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    நாசா

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! விண்வெளி
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் விண்வெளி
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை! விண்வெளி

    விண்வெளி

    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்
    நிலவை ஆராய்ச்சி செய்ய உலக நாடுகள் போட்டியிடுவது ஏன்? சந்திரன்
    சந்திரயான்-3 திட்டத்திற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் சந்திரயான் 3
    சந்திரயான் திட்டங்களை வழிநடத்திய தமிழர்கள் வரிசையில் இணைந்த வீரமுத்துவேல், யார் இவர்? சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025