NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்
    நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்

    நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 20, 2023
    09:57 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றகரமாகத் தரையிறங்கி விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் புதிய சாதனை படைத்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் பல விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தும் முனைப்போது இருக்கிறது இஸ்ரோ.

    அதில் ஒரு திட்டமாக, நிலவிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வருவதையும், இஸ்ரோ செயல்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ Space Application Centre-ன் இயக்குநர் நிலேஷ் தேசாய்.

    அடுத்த ஐந்து முதல் ஏழு வருடங்களுக்குள் இந்த நிலவு மாதிரியை பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    இஸ்ரோ

    நிலவின் மாதிரிகளை பூமிக்கும் எடுத்து வரும் இஸ்ரோவின் புதிய திட்டம்: 

    இந்த திட்டத்திற்கு நான்கு வகையான மாடியூல்கள் மற்றும் இரண்டு ராக்கெட்டுகளை இஸ்ரோ பயன்படுத்தும் எனத் தெரிவித்திருக்கிறார் நிலேஷ் தேசாய்.

    டிரான்ஸ்பர் மற்றும் ரீ-எண்ட்ரி மாடியூல்களுக்கு GSLV மார்க்-II ராக்கெட்டையும், அசன்டர் மற்றும் லேண்டர் மாடியூல்களுக்கு GSLV மார்க்-III ராக்கெட்டையும் இஸ்ரோ பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

    சந்திரயான்-3 தரையிறங்கிய சிவ சக்தி புள்ளியில் இருந்தே நிலவின் மாதிரிகளை சேகரிக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், சந்திரயான்-3 திட்டத்தைப் போலவே இதனையும் பூமியின் கணக்கில் 14 நாட்களுக்குள் செயல்படுத்தி முடிக்க இஸ்ரோ திட்டமிட்டு வருதவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது முதற்கட்டமாக இத்திட்டத்தை 2028ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரன்
    விண்வெளி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரோ

    ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1' ஆதித்யா L1
    ஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ ஆதித்யா L1
    "இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி இந்தியா
    சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர்  சந்திரயான் 3

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    விண்வெளி

    ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் பள்ளி மாணவர்கள், காணொளியைப் பகிர்ந்த மத்திய அமைச்சர் இஸ்ரோ
    சந்திரயான் 3 குறித்த மாபெரும் 'வினாடி வினா போட்டி', ரூ.1 லட்சம் பரிசு சந்திரயான் 3

    இந்தியா

    இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார் ஹோட்டல்
    சில்லறை பணவீக்கம் 5 மாதம் இல்லாத அளவு சரிந்தது  ரிசர்வ் வங்கி
    தேசிய குழந்தைகள் தினம்: முதலைச்சர் ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் உள்ளிட்டோர் வாழ்த்து முதல் அமைச்சர்
    உலக  நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர் நீரிழிவு நோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025