NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்
    நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்

    நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம்; ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இந்தியா விருப்பம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 09, 2024
    08:08 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அமெரிக்கா மற்றும் ரஷ்யா என இரண்டு எதிரெதிர் துருவங்களுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது.

    கனவுத் திட்டமான ககன்யான் பயணத்தின் சுபான்ஷு சுக்லாவை அமெரிக்காவிலுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்தியா அனுப்பும் அதே வேளையில், தனது நிலவு ஆற்றல் திட்டத்தில் ரஷ்யாவுடன் கூட்டு சேருவதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா இப்போது ஆராய்ந்து வருகிறது.

    இந்த திட்டத்தில் சீனாவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    சமீபத்தில் கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய ரஷ்யாவின் அணுசக்தி கழகத்தின் தலைவர் அலெக்சி லிகாஸ்வ் சீனா மற்றும் இந்தியா இந்த திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று கூறியதை வைத்து இந்த தகவல் பரவி வருகிறது.

    சிறிய அணுமின் நிலையம்

    நிலவில் சிறிய அணுமின் நிலையம்

    இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, அரை மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஒரு சிறிய அணு மின் நிலையத்தை உருவாக்குவது, அடித்தளத்திற்கு தேவையான சக்தியை வழங்குவதை நிலவு மின் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த நிலவுலக ஆற்றல் தீர்வை உருவாக்குவதில் சீனாவும் இந்தியாவும் ரஷ்ய விண்வெளி அமைப்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக லிகாஸ்வ் கூறினார்.

    அணுமின் நிலையம், ரஷ்யாவும் சீனாவும் இணைந்து செயல்படும் முன்மொழியப்பட்ட நிலவு தளத்திற்கு ஆற்றலை வழங்கும்.

    சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் இந்த கூட்டு நிலவு தளம் 2035 மற்றும் 2045க்கு இடையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விண்வெளி
    நிலவு ஆராய்ச்சி
    ரஷ்யா

    சமீபத்திய

    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்
    உங்கள் இணைய செயல்பாட்டை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கண்காணிப்பதை தடுப்பது  எப்படி ? இதைத் தெரிந்து கொள்ளுங்கள் மெட்டா
    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி

    இந்தியா

    உங்கள் கார் பாதுகாப்பானதா? பாரத் என்சிஏபி திட்டத்தின் கீழ் புதிய முயற்சி அறிமுகம் வாகனம்
    இந்தியாவில் புதிய சொகுசு கார்களை அறிமுகம் செய்தது இத்தாலியின் மஸராட்டி கார்
    மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் பொறுப்பேற்பு மத்திய அரசு
    2024-25 முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 17.2 சதவீதம் நிதித்துறை

    விண்வெளி

    விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடிய விண்வெளி வீரர்கள்; வைரலாகும் காணொளி சர்வதேச விண்வெளி நிலையம்
    ISS இல் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? நிபுணர் விளக்குகிறார் சர்வதேச விண்வெளி நிலையம்
    நீங்கள் விண்வெளியில், சந்திரனில், செவ்வாய் கிரகத்தில் இறந்தால் என்ன ஆகும்? வாழ்க்கை
    ஸ்டார்லைனர்: ஆகஸ்ட் மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் ஸ்டார்லைனர்

    நிலவு ஆராய்ச்சி

    நிலவின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கிய சீனாவின் Chang'e-6  சீனா
    எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு விண்வெளி
    அப்பல்லோ நிலவு பயணங்களின் போது நட்டு வைத்த நாசாவின் கொடிகள் இன்னும் அங்கே நிற்கின்றனவா? நாசா
    பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது வானியல்

    ரஷ்யா

    ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின் விளாடிமிர் புடின்
    மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை  அமெரிக்கா
    உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களை தொடர்புகொண்டு பேசினார் பிரதமர் மோடி  இந்தியா
    பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025