NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கடவுச்சொற்களை பராமரிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடவுச்சொற்களை பராமரிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை! 
    அதிகரிக்கும் டிஜிட்டல் நிதி திருட்டுக்கள்

    கடவுச்சொற்களை பராமரிப்பதில் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 13, 2023
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் நிதி தொடர்பான திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

    ஆனால், இன்னும் பொதுமக்களுக்கு நிதி திருட்டு சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது லோக்கல் சர்வேயின் அறிக்கை ஒன்று.

    கடந்த 2022-ல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 5,406 நிதி திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இது அதற்கு முந்தைய காலகட்டத்தை விட கிட்டத்தட்ட 25% அதிகம்.

    லோக்கல் சர்வேயின் அறிக்கை, நிதித் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவில்லை, முக்கியமாக டிஜிட்டலாக நடைபெறும் நிதி திருட்டைத் தடுக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவது குறைவாகவே இருக்கிறது எனச் சுட்டிக் காட்டுகிறது.

    நிதி

    இன்னும் விழிப்புணர்வு தேவை: 

    டிஜிட்டல் உலகில் நமது நிதி சார்ந்த சேவைக் கணக்குகளை பாதுகாப்பாக வைப்பதில் கடவுச்சொற்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அந்தக் கடவுச் சொற்களை மக்கள் பாதுகாப்பாக வைப்பதில்லை எனக் கூறுகிறது அந்த அறிக்கை.

    இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட மக்களில் 24% பேர் தங்களுடைய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டின் பின் நம்பர்கள், வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் அது தொடர்பான கடவுச்சொற்கள் உள்ளிட்ட தகவல்களை தங்களுடைய மொபைல் போனிலேயே சேமித்து வைப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    அதிலும், 8% பேர் நோட்ஸ் போன்ற ஆப்களிலும், 9% பேர் தொடர்பு பட்டியலிலும் சேமித்து வைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 14% பேர் மட்டுமே தங்கள் கடவுச் சொற்களை நினைவில் வைத்துப் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    தொழில்நுட்பம்

    தொழில் முனைவோர் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்: 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! அரசு திட்டங்கள்
    புதிய 2023 ராயல் என்ஃபீல்டு 350 - பழைய மாடலுக்கான வேறுபாடுகள் என்ன? ராயல் என்ஃபீல்டு
    அதிகமாகும் இணையத்தள மோசடி - பாதுகாப்பாக இருப்பது எப்படி? தொழில்நுட்பம்
    மெர்சிடிஸ் AMG S 63 E - சிறப்பு அம்சங்கள் மற்றும் விலையை சரிபார்க்கவும்: சொகுசு கார்கள்

    தொழில்நுட்பம்

    கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்? தொழில்நுட்பம்
    ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம் தொழில்நுட்பம்
    ஏப்ரல் 08-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025