Page Loader
விரைவில் விமான பயணத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்: இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பம்
விரைவில் விமான பயணத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்

விரைவில் விமான பயணத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்: இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 30, 2024
01:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் விமான பயணத்தில் இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக சாத்தியமில்லை. ஏனெனில் இந்திய விமானங்களில் இணைய இணைப்பைப் பெற சில ஆண்டுகளுக்கு முன்பு விமானங்களை அனுமதித்தது. இந்த நிலையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனமான வியாசாட் என்ற உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம், இந்திய வானத்தில் இணைய இணைப்பை வழங்க முடியும் என்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. எல்லாம் சரியாக நடந்தால்- அதன் மிக உயர் தொழில்நுட்ப செயற்கைக்கோள் 'ஜிசாட்-20' துணையுடன் விமானத்தில் இணையம் சாத்தியமாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு பகுதியாக பெங்களூரில் உள்ள யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தால் இந்த உயர் செயல்திறன் செயற்கைக்கோள் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்பாடு

செயற்கைகோள் செயல்பாடு என்ன?

உயர் செயல்திறன் செயற்கைக்கோள் என்பது பாரம்பரிய செயற்கைக்கோள்களை விட அதிக விகிதத்தில் தரவை அனுப்பக்கூடிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்பை வழங்குவது மட்டுமின்றி, ஐந்தில் ஒரு பங்கு திறனில் விமானத்தில் இணையத்தை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொலைதூர இடங்களை இணைப்பது என்பது உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான வியாசாட் இன்க் இன் ஒரு பெரிய நோக்கமாகும். இது ஏற்கனவே இந்திய ஆயுதப்படைகளுக்கு நம்பகமான இணைப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்தியாவில் விமானத்தில் இணையம் இல்லாதது என்ற பெரிய குறையை நிவர்த்தி செய்ய தற்போது வியாசட் மற்றும் இஸ்ரோ இணைந்துள்ளது.