NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ
    சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ

    சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 30, 2023
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா-L1 திட்டங்களை திட்டங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான சுக்ரயான்-1 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ.

    வெள்ளியை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் திட்டம் இது. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியும் ஆகிய நாடுகள் வெள்ளியை ஆய்வு செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றன.

    அவற்றுள் 2010ம் ஆண்டு வெள்ளியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக ஜப்பான அனுப்பிய அகாட்சுகி ஆர்பிட்டரானது தற்போதும் வெள்ளியை வலம் வந்து கொண்டிருக்கிறது.

    வெள்ளியை ஆய்வு செய்யும் சுக்ரயான்-1 திட்டத்தை செயல்படுத்துவதற்கான முடிவை 2012ம் ஆண்டு எடுத்து இந்தியா. 11 ஆண்டுகள் கழித்து, தற்போது அத்திட்டம் செயல்பாட்டு வடிவத்தை அடைந்திருக்கிறது.

    இஸ்ரோ

    ஏன் நாம் வெள்ளியை ஆய்வு செய்ய வேண்டும்: 

    சூரிய குடும்பத்தில் கிட்டத்தட்ட பூமியின் அளவிலேயே இருக்கும் மற்றொரு கோள் வெள்ளி. ஆனால், அதன் வளிமண்டலமானது பூமியை விட 100 மடங்கு அடர்த்தியானது. மேலும் அது இராசயனங்கள் மற்றும் அமிலங்களால் நிறைந்ததும் கூட.

    வெள்ளியைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம், பூமியின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

    வெள்ளியின் வளிமண்டலத்தைப் போல பூமியின் வளிமண்டலமும் மாறுவதற்கான வாய்ப்புகளை நாம் புறம் தள்ளி விட முடியாது. வெள்ளியை தொடர்ந்து பல நாடுகள் ஆய்வு செய்வதற்கு அதுவும் ஒரு காரணம்.

    இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தவிருக்கிறது என்பது குறித்த முழுமையான தகவல்களை இஸ்ரோ இன்னும் வெளியிடவில்லை. எனினும், விரைவில் செயல்படுத்தப்படும் என்று மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    விண்வெளி

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    இஸ்ரோ

    சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல் சந்திரயான் 3
    அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் நேரலை சாதனையை முறியடித்த சந்திரயான் 3 சந்திரயான் 3
    சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள் சந்திரயான் 3
    நிலவில், அசோகர் சின்னத்தையும், இஸ்ரோ சின்னத்தையும் பொறித்த தருணம்: ISRO வெளியிட்ட புதிய வீடியோ சந்திரயான் 3

    விண்வெளி

    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ இஸ்ரோ
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி இந்தியா
    சந்திரயான்-3 திட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த ரஷ்யாவின் லூனா-25 ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025