
அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தகவல் ஹேக் செய்யப்பட்டது
செய்தி முன்னோட்டம்
வட அமெரிக்காவின் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் 1.4 மில்லியன் அமெரிக்க வாடிக்கையாளர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது. இந்த தரவு மீறல் ஜூலை 16, 2025 அன்று நிகழ்ந்தது, அடுத்த நாள் கண்டுபிடிக்கப்பட்டது என்று மைனேயின் அட்டர்னி ஜெனரலிடம் ஒரு ஒழுங்குமுறை தாக்கலில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் ஒரு தீங்கிழைக்கும் சமூக பொறியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு கிளவுட் அடிப்படையிலான வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) அமைப்பை அணுகியதாக நிறுவனம் வெளிப்படுத்தியது. இந்த அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் ஹேக்கருக்கு தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை (PII) பெற அனுமதித்தது. இருப்பினும் ஹேக்கிங்கில் கசிந்த தரவின் குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
நிறுவனம்
அலையன்ஸ் லைஃப் நிறுவனம் சொல்வது என்ன?
அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த மீறல் அவர்களின் அமெரிக்க செயல்பாடுகளுக்கு மட்டுமே என்றும், காப்பீட்டாளரின் உள் நெட்வொர்க் மற்றும் பாலிசி நிர்வாக தளம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளைப் பாதிக்கவில்லை என்றும் கூறினார். இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து எஃப்பிஐக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் நிறுவனம் வலியுறுத்தியது. டெக் க்ரஞ்ச் முதலில் வெளியாகிய இது தொடர்பான அறிக்கை, காப்பீட்டுத் துறையில், குறிப்பாக மூன்றாம் தரப்பு தளங்களை உள்ளடக்கிய தரவு பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. அலையன்ஸ் லைஃப் எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், எதிர்கால சம்பவங்களைத் தடுக்க தேவையான தீர்வு நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதன் சைபர் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.