Page Loader
புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று, புத்த பௌர்ணமியாக கொண்டாடுகிறார்கள், புத்த மதத்தவர்கள்

புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 05, 2023
08:54 am

செய்தி முன்னோட்டம்

இந்த ஆண்டு மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இது புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாகும். இது இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், சீனா, பங்களாதேஷ், பூட்டான், இந்தோனேசியா, தென் கொரியா, சிங்கப்பூர், மங்கோலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. புத்தர் ஜெயந்தி என்பது, கௌதம புத்தர் என்று அழைக்கப்பட்ட இளவரசர் சித்தார்த்த கௌதமரின் பிறந்தநாளாகும். கௌதம புத்தர், நேபாளத்தில் கிமு 563-483 இல், பௌர்ணமி அன்று பிறந்தார் என்று நம்பப்படுகிறது. 29 வயது வரை, அரண்மனை காவலில் இருந்த கௌதமர், தனது 29 வயதில் முதன்முறையாக வெளி உலகில் காலடி எடுத்துவைத்ததும் கண்ட காட்சிகளின் மூலம், வாழ்க்கை தற்காலிகமானது என்பதை உணர்ந்தார்.

card 2

அரண்மனை வாழ்க்கையை துறந்து, துறவறம் ஏற்ற கௌதமர்

வாழ்க்கையின் பொருளை உணர்ந்த இளவரசர் கௌதமர், அரண்மனை வாழ்க்கையை விட்டுவிட்டு, யோக துறவுகளைக் கற்றுக்கொள்வதற்காக, ஆறு ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தார். பின்னர், அவர் ஏழு வாரங்கள் போதி மரத்தடியில் கழித்தார், நிர்வாண நிலையை அடைந்தார். புத்தர் ஜெயந்தி என்பது பௌத்தர்களுக்கு ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்நாளில், புத்த பக்தர்கள், போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவார்கள். மடங்கள் மற்றும் புனித யாத்திரை தலங்களுக்கு சென்று வழிபடுகிறார்கள். கீர் என்று அழைக்கப்படும் பாயசத்தை சமைத்து, வலியோருக்கு வழங்குவார்கள். அதோடு, நாள் முழுவதும் தியானத்தில் ஈடுபடுவார்கள். இந்நாளில் பலவகையான சேவை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்வார்கள்.