NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
    குழந்தைகளுக்கு இரவிலும் அடிக்கடி குடிக்க தண்ணீர் அவசியம்

    குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 16, 2025
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.

    கோடைக்கால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவிலும் நீர் சத்து குறையக்கூடிய அபாயம் இருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    இதனையடுத்து, குழந்தைகளுக்கு இரவிலும் அடிக்கடி குடிக்க தண்ணீர் அவசியம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    குறிப்பாக அதன்படி, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், செல்லும் பொழுது குடிநீர் பாட்டில், குடை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    அறிவுறுத்தல்

    சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவுறுத்தல்

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி,"பகலின் வெப்பம் போன்று, இரவிலும் சூடான காற்று காரணமாக உடலில் நீர் சத்து குறைவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோதும் வாய், நாக்கு வறண்டு விடும். பெரியவர்கள் தாகம் ஏற்பட்டால் தானாக தண்ணீர் குடித்துவிடுவர். ஆனால் குழந்தைகள் தாங்களே தண்ணீர் கேட்பது அரிது. எனவே, பெற்றோர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது அவசியம்." என தெரிவித்துள்ளது.

    அதேபோல், ஏசி வசதி இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் தினமும் இரு முறை குளிப்பதும், சிறியவர்களுக்கு உடல்சூட்டை தவிர்க்கும் வகையில் சீரான தண்ணீர் அளவை உறுதி செய்வதும் முக்கியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீரிழப்பு

    நீரிழப்பு விளைவுகள் பற்றியும் சுகாதாரத்துறை எச்சரிக்கை

    தண்ணீர் போதியளவில் அருந்தவில்லை என்றால், உடலில் ஏற்படும் அசௌகரியங்கள் பற்றியும் சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது.

    அதன்படி,

    தசைப்பிடிப்பு

    தலைவலி

    தலைச்சுற்றல்

    சிறுநீர் சிக்கல் போன்ற உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்றும், நீடித்த நீரிழப்பு காரணமாக மூளை, சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "தாகம் இல்லாவிட்டாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சராசரியாகக் குடிநீர் அருந்த வேண்டும். தினமும் இரு வேளை குளிப்பதும் தவறக்கூடாது" என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குழந்தைகள்
    குழந்தைகள் ஆரோக்கியம்
    குழந்தை பராமரிப்பு
    குழந்தை பராமரிப்பு

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    குழந்தைகள்

    இன்று போலியோ தினம் அனுசரிப்பு - முக்கியத்துவங்கள் மற்றும் அவசியங்கள் என்னென்ன ? இந்தியா
    மனைவி பிரிவு தாங்காமல் தனியே தவித்த தந்தை - திருமணம் செய்து வைத்த மகள் கேரளா
    தமிழ்நாட்டில் விஜயதசமி கொண்டாட்டம் - கல்வியை துவங்கிய மழலைகள்  கல்வி
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்

    குழந்தைகள் ஆரோக்கியம்

    பெற்றோர்களே, உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் மொபைல் போன் கொடுக்கலாம்? குழந்தை பராமரிப்பு
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தை கூட்ட சில வழிகள் இதோ! குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்கள் கவனத்திற்கு: குழந்தைகளை சுதந்திரமாகவும், தனிச்சையாகவும் விளையாட ஊக்குவிக்க வேண்டும் குழந்தை பராமரிப்பு

    குழந்தை பராமரிப்பு

    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதை குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா வைரல் செய்தி
    பெற்றோர்களே, WFH செய்கிறீர்களா? வேலையையும், குடும்பத்தையும் நிர்வாகிக்க உங்களுக்கான டிப்ஸ் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி? குழந்தை பராமரிப்பு

    குழந்தை பராமரிப்பு

    ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்கள், குழந்தைகளிடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? குழந்தைகள் உணவு
    குறையும் திருமணங்கள்; சரியும் பிறப்பு விகிதம்; கவலையில் தென்கொரியா உலகம்
    உங்கள் மகனிடம், இந்த வாக்கியங்களை உபயோகிப்பது, தவறான உதாரணமாக மாறும் குழந்தை பராமரிப்பு
    பெற்றோர்களே, குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்கப்படுத்துங்கள் குழந்தை பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025