NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?
    ஆயுத பூஜை பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன ?

    ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?

    எழுதியவர் Nivetha P
    Oct 23, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் நவராத்திரி பூஜைகள் நடந்து வந்த நிலையில் இறுதி கட்டமாக இன்று(அக்.,23) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

    சக்தி உற்சவமாக இந்த நவராத்திரி பூஜைகள் நடத்தப்படுகிறது.

    நவராத்திரி தினத்தின் இறுதி நாள் மட்டுமின்றி நவமி திதி என்ற கணக்கீட்டிலும் இந்த ஆயுத பூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது.

    நம்முள் பலருக்கு ஆயுத பூஜை தினமன்று ஏன் அரிவாள், கத்தி, வாகனங்கள் போன்ற நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபடுகிறோம்? என்ற கேள்வி நிலவி வருகிறது.

    அது ஏன் என்றால், சக்தி அதாவது அம்பாலின் அருளை பெறுவதற்காக தான் இந்த நவராத்திரி பூஜைகளை நாம் செய்கிறோம்.

    பூஜை 

    உயிரில்லா ஜட பொருட்களுக்கு பூஜை செய்வது ஏன் ?

    அதன்படி, 'ஜடம்' என்று கூறப்படும் உயிரில்லா பொருட்களிலும் சக்தி என்னும் சைதன்யம் உள்ள காரணத்தினால் அது செயல்படுவதாக கூறப்படுகிறது.

    என்னதான் நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றில் ஓடுகிறது என்றாலும், அதுக்குள் உள்ள ஓர் சக்தி தான் அதனை இயங்கவைக்கிறது.

    அந்த சக்தியினை வழிபடும் விதமாகவே இந்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது என்று ஆன்மீகம் ரீதியாக சிவஸ்ரீ சண்முக சிவாச்சாரியார் ஓர் பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.

    இருக்கை 

    ஆயுத பூஜை கொண்டாடப்படுவதன் அவசியம் 

    நாம் அமரும் இருக்கை, பார்க்கும் கண்ணாடி, மிக்சி-க்ரைண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு உயிர் இல்லையெனிலும் அவைகள் இல்லாமல் நமது அன்றாட வாழ்வு இயங்காது.

    அப்படிப்பட்ட உயிரில்லா பொருட்கள் இயங்க உந்துகோளாக இருக்கும் சக்தியினை போற்றி வழிபாடு செய்யும் தினமாகவே இந்த ஆயுத பூஜை தினம் கொண்டாடப்படுகிறது.

    வீட்டில் மட்டுமில்லாமல் அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் வைத்திருப்போரும் இன்றைய தினம் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.

    பூஜை 

    வாழ்வில் முன்னேற்றம் வேண்டி மேற்கொள்ளப்படும் ஆயுத பூஜை 

    இப்படி செய்வதன் மூலம் வியாபாரங்கள் பெருகும், வாகனங்கள் இயக்கப்படும் பொழுது பாதுகாப்பு, மற்றும் பழுதுப்படாமல் இயங்கும் என்று பல நம்பிக்கையின் பேரில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    அப்படி நவமி தினத்தன்று நாம் வைத்து வழிபடும் பொருட்கள் அனைத்தையும் தசமி நாளான விஜயதசமி தினத்தன்று உபயோகப்படுத்த வேண்டும்.

    அப்படி பயன்படுத்தவில்லை எனில், நாம் செய்த பூஜைகள் அனைத்தும் வீண் தான் என்றும் ஆன்மீக ரீதியில் கூறுகிறார்கள்.

    ஆயுத பூஜை பண்டிகையினை சரஸ்வதி பூஜை என்றும் கூறுவார்கள்.

    பூஜை 

    ஆயுத பூஜை வழிபடுவது எப்படி ?

    ஆயுத பூஜை அன்று, ஆயுதங்கள் மட்டுமின்றி படிக்கும் புத்தகங்கள், பணிபுரியும் கணினிகள் போன்ற பொருட்களையும் வைத்து நாம் பூஜை செய்கிறோம்.

    மாணவர்கள் புத்தி கூர்மையோடு நன்றாக படிக்கவும், பணிபுரிவோர் சாதுர்யமாக செயல்படவும் இவ்வாறு சக்தியினை வழிபடுகிறோம்.

    இன்றைய தினம் நாம் வீட்டில் பூஜை செய்யும்போது வைத்து வைக்கப்படும் அனைத்து பொருட்களையும் இந்த தினம் முழுவதும் எடுத்து பயன்படுத்தாமல் பூஜை அறையிலேயே வைத்திருக்க வேண்டும்.

    மறுநாள் விஜயதசமி தினத்தன்று எடுத்து தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்று வரலாறு கூறுகிறது.

    இதன்படி, அனைவரும் ஆயுத பூஜையினை இனிதாக கொண்டாடி வாழ்வில் வளம்பெற Newsbytes-ன் வாழ்த்துக்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பண்டிகை
    நவராத்திரி

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  பண்டிகை
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு பிரியர்கள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025