NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்
    மொழி என்பது நம் பண்பாட்டு அடையாளம். ஒரு சமூகத்தின் அடையாளம்.

    உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 21, 2024
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும்தான் என்று பலரும் தவறாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், மொழி என்பது நம் பண்பாட்டு அடையாளம். ஒரு சமூகத்தின் அடையாளம்.

    ஆனால், இன்றைய உலகமயமாதலினால் மொழிகள் அச்சுறுத்தலுக்குள்ளாகிவருவது மட்டுமல்ல, மறைந்துபோகும் அபாயமும் உள்ளது.

    மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள்.

    மொழி எவ்வளவு தொன்மையானதாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு உன்னதமான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சரி, வழக்கொழிந்து போய்விட்டால், இலக்கியங்களெல்லாம் வெற்றுக் கிறுக்கல்களாகி விடும்.

    தாய்மொழியினை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக சிறப்பிக்கிறது யுனெஸ்கோ.

    வரலாறு

    எதற்காக குறிப்பாக தாய்மொழி தினம்?

    இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது பங்களாதேஷ்.

    1948இல், அப்போதைய ஜின்னா தலைமையிலான அரசு, உருது மொழியை பாகிஸ்தானின் ஒற்றை ஆட்சி மொழியாக மாற்ற திட்டமிட்டது. கல்வி தேர்வில் இருந்த வங்கமொழியை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது.

    இதற்கு கிழக்கு பாகிஸ்தான், அதாவது பங்களாதேஷ், கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கினர்.

    இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.

    1952 பிப்ரவரி 21ஆம் தேதி டாக்கா பல்கலைக்கழக மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில், அரசு நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர்.

    வங்கமொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவாகவே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியை, உலக தாய் மொழி தினமாக 1999இல் யுனெஸ்கோ அறிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    யுனெஸ்கோ

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    உலக செய்திகள்

    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள் உலகம்
    சாமானிய பெண்ணை திருமணம் செய்யவுள்ள புருனே இளவரசர் அப்துல் மாதின் திருமணம்
    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி பாகிஸ்தான்
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்

    யுனெஸ்கோ

    உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை  ஆஸ்திரேலியா
    கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025