சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன?
இக்கால இளைஞர்கள் மட்டுமின்றி, வயதானவர்கள் கூட தனியாகவே சுற்றுலா செல்ல விருப்புகிறார்கள். உலகின் பல இடங்களையும் அதன் பாரம்பரியத்தையும் கண்டுகளிக்கவும், 'மீ டைம்'-ஐ (Me Time) அனுபவிக்கவும், தன்னை பற்றிய புரிதலை உணரவும், இந்த சோலோ ட்ரிப் உதவுகிறது. எனினும் இந்தியாவில் இது போன்ற சோலோ ட்ரிப் செல்ல பாதுகாப்பான இடங்கள் உண்டா? இருக்கிறது..இதோ அதற்கான பட்டியல். புதுச்சேரி/பாண்டி/ பாண்டிச்சேரி: இப்படி பல மாதிரி அழைக்கப்படும் பாண்டிச்சேரி, நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளின் விருப்பமாக இருந்து வருகிறது. பிரஞ்சு கலாச்சாரம், அமைதியான சூழல், அழகான தேவாலயங்கள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவற்றுடன் ஒரு இனிமையான பயண அனுபவத்தை பெறலாம்.
சோலோ ட்ரிப் செல்ல சில இடங்கள்
வர்கலா: வர்கலா, கேரளாவில் உள்ள ஒரு கடற்கரை நகரமாகும். இங்கே அரபி கடலை நோக்கியபடி ஒரு அழகிய குன்றும் அமைந்துள்ளது. திரைப்பட ஷூட்டிங்குகள், போட்டோ ஷூட்கள் எடுக்க சிறந்த இடம். அங்கிருக்கும் ஹோட்டல்களில், ஆயுர்வேத ஸ்பா, மசாஜ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஷில்லாங்: மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் , பைன் மரங்களால் சூழப்பட்ட ஒரு அழகான நகரம். வசீகரமான இயற்கைக்காட்சி, அவ்வப்போது பெய்யும் சாரல் மழை மற்றும் மென்மையான குளிர்ந்த காற்று இந்த மலை வாசஸ்தலத்திற்கு அழகை கூட்டுகிறது. "கிழக்கின் ஸ்காட்லாந்து" என்பது இந்த இடத்திற்கு மற்றொரு பெயர்.தர்மசாலா: இந்தியாவில் மிகவும் அமைதியான இடங்களில் ஒன்று தர்மசாலா. ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த மலை நகரம், நாட்டின் மிகப்பெரிய திபெத்திய சமூகத்தின் தாயகமாகும்.