NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை
    தேநீர் சுவைக்கு அடிமையான இந்தியா - வரலாறு குறித்து ஓர் பார்வை

    ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை

    எழுதியவர் Nivetha P
    Aug 30, 2023
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தண்ணீர் அடுத்தபடியாக மக்கள் விரும்பி அருந்தும் பானம் எதுவென்றால் அது தேநீர் தான்.

    தற்போதைய காலகட்டத்தில் தேநீர் கடை இல்லாத தெருவை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.

    காலை எழுந்தவுடன் தேநீர் பருகினால் மட்டுமே அந்த நாள் நமக்கு துவங்கியதாக கருதப்படும் அளவிற்கு தேநீர் நமது வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

    ஆனால் இந்த தேநீர் பருகும் வழக்கம் சீனா நாட்டிலிருந்து தான் துவங்கியுள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அங்கு தேநீர் பருகும் வழக்கம் இருந்துள்ளது.

    அங்கிருந்து இந்த வழக்கம் ஜப்பான் நாட்டிற்கு பரவியுள்ளது.

    இந்தியா 

    ஆங்கிலேயர்கள் மூலம் இந்தியாக்குள் நுழைந்த தேயிலை 

    இந்தியர்களாகிய நமக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து தான் வந்தது, இந்த தேநீர் பருகும் வழக்கம்.

    ஆங்கிலேயர்கள் நமது நாட்டினை ஆட்சி செய்த பொழுது, அவர்கள் தேவைக்காக மலைகளில் தேயிலையினை பயிரிட வைத்தனர்.

    பின்னர் அதனை நம் நாட்டு மக்கள் நுகர துவங்கியதையடுத்து தேயிலையின் மோகம் இந்தியாவில் அதிகமானது.

    பிரிட்டனில், 17ம் நூற்றாண்டில் தேயிலை மிக பிரபலமடைந்த காலம்.

    அதன்பின்னரே இந்தியாவில் ஆங்கிலேயர் இதனை பிரபலமாக்கினர்.

    ஆங்கிலேயர் திணித்த வழக்கம் தான் தேநீர் என்றாலும், இந்தியா சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில், தேயிலையின் தேவை சர்வதேச அளவில் அதிகரித்தது என்று தெரிகிறது.

    தேநீர் 

    மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்த தேயிலை தோட்டங்கள் 

    இதனால் அதிகளவு தேயிலை தோட்டங்களை அமைத்து தேயிலையினை பயிரிட்டு, விற்பனை செய்து இந்தியா லாபம் அடைந்தது.

    மேலும் இந்த தேயிலை தோட்டம் மலைவாழ் மக்களுக்கு நல்லதொரு வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் தற்போதுவரை அளித்து வருகிறது.

    அதன்படி அதிக வேலைவாய்ப்பளிக்கும் துறைகளுள் தேயிலைத்துறை 2ம் இடத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்தியாவில் முதன்முறையாக தேயிலையினை பயிரிட்டவர், மணிராம் தேவான் என்று கூறப்படுகிறது.

    1920ம் ஆண்டிற்கு பிறகு தான் இந்தியாவில் அனைவரும் தேநீர் குடிக்கும் வழக்கம் உருவானது என்றும் வரலாறு கூறுகிறது.

    உலகம் 

    உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா 2ம் இடம் 

    இதனிடையே உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா 36% என்னும் விதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 22.6% என்னும் வீதத்தில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் மாநில வாரியாக பார்த்தால், இந்தியாவில் அசாம் மாநிலம் தான் தேயிலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

    3,04,000 எக்டரில் தேயிலை இம்மாநிலத்தில் பயிரிடப்படும் நிலையில், இம்மாநில தேநீர் ருசிக்கு உலகமே அடிமை என்றுக்கூட கூறலாம்.

    தேநீர் வகைகளுள் நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு.

    சிறியவர் முதல் பெரியவர் வரை, எடையினை குறைக்க உதவும் என்று கூறி அதிகம் குடிப்பது 'க்ரீன் டீ'.

    இந்த க்ரீன் டீ, ஜப்பான் மற்றும் சீனாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

    தொடர்ந்து, இந்தியாவில், தமிழ்நாடு மாநிலம் நீலகிரி மாவட்டம் தேயிலை உற்பத்திக்கு பெயர்போனதாகும்.

    வகைகள் 

    இந்திய மக்களிடையே இன்றியமையாத பானமாக மாறிப்போன தேநீர் 

    இந்தியாவில் பிரபலமான தேநீர் வகைகள் பல உண்டு.

    இந்தியாவில் ப்ளாக் டீ, க்ரீன் டீ, ஒயிட் டீ, மசாலா டீ, சாய் டீ, மூலிகை தேநீர், பழ தேநீர், ஊலாங் தேநீர் என பல வகைகள் உண்டு.

    வளரும் இடம், சூழல் உள்ளிட்ட அடிப்படையில் இதன் சுவைகள் மாறுபடும். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டு குளிரை எதிர்கொள்ளவே சூடாக தேநீர் பருகினர்.

    ஆனால் இந்திய மக்கள் அப்படியல்ல.

    கொளுத்தும் வெயில் காலமாக இருந்தாலும் காலை எழுந்தவுடன் தேநீர்!

    திருமணம் போன்ற நிகழ்வுகள், பல்வேறு நிகழ்ச்சிகள், விருந்தினர் வருகையின் பொழுது, தலைவலி ஏற்பட்டால் என பல சந்தர்பங்களில் தேநீர் ஒரு இன்றியமையாத பானமாக இந்திய மக்களுள் கலந்துவிட்டது என்றால் அது மிகையல்ல.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    ஜப்பான்
    நீலகிரி

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 25 தங்கம் வெள்ளி விலை
    உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தோல்வி உலக சாம்பியன்ஷிப்
    இந்தியாவில் அதிகம் திருடப்படும் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் எவை? பைக்
    2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி துப்பாக்கிச் சுடுதல்

    சீனா

    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் உலகம்
    'ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கேப்டனாக அஷ்வினை அனுப்பலாம்': தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்
    தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா பாகிஸ்தான்
    SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள் நரேந்திர மோடி

    ஜப்பான்

    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்
    ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! சுற்றுலா
    ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ வைரல் செய்தி
    உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஜப்பானிய கருத்துக்கள் ஆரோக்கியம்

    நீலகிரி

    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீட் தேர்வு
    'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர்  ஆஸ்கார் விருது
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரி
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025