NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்
    காந்தி ஜெயந்தி 2024

    காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி காந்தி ஜெயந்தி எப்போது தொடங்கப்பட்டது, அதன் வரலாறு மற்றும் பின்னணி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.

    அக்டோபர் 2, 1869இல், குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியாவின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். காந்தியின் அணுகுமுறை மற்றவர்களை விட தனித்துவமானது.

    அவர் வன்முறையற்ற ஒத்துழையாமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

    சத்தியாகிரகம் என்ற அவரது இந்த தாரக மந்திரம், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    வரலாறு

    காந்தி ஜெயந்தி தொடங்கப்பட்டது எப்போது?

    1948 ஜனவரி 30ஆம் தேதி காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியை காந்தி ஜெயந்தி என்று இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    அவரது மரபு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு ஈடு இணையற்றது. அகிம்சையை ஊக்குவிப்பதன் மூலம், ஆயுத மோதலில் ஈடுபடாமல் அடக்குமுறை ஆட்சியை அகற்ற உதவினார்.

    உலகளாவிய அமைதி மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய அவரது செய்தி உலக அளவில் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

    அமைதிக்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை 2007 ஆம் ஆண்டில் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்தது.

    முக்கியத்துவம்

    காந்தி ஜெயந்தியின் முக்கியத்துவம்

    காந்தி ஜெயந்தியின் முக்கியத்துவம், மகாத்மா காந்தியின் மதிப்புகளை நினைவு கூர்வதிலும் பிரதிபலிப்பதிலும் உள்ளது.

    உண்மை, அகிம்சை மற்றும் எளிமை ஆகியவற்றில் அவர் அளித்த முக்கியத்துவம் தனிநபர்களையும் சமூகங்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

    மாற்றத்தைக் கொண்டுவருவதில் அமைதியான எதிர்ப்பின் ஆற்றலை நினைவூட்டுவதாகவும் இந்த நாள் விளங்குகிறது.

    காந்தி ஜெயந்தி அன்று இந்தியாவில் தேசிய விடுமுறையாகும். அவரது நினைவைப் போற்றும் வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த நாளில் மூடப்படும்.

    மகாத்மா காந்தியின் படம் அனைத்து இந்திய கரன்சி நோட்டுகளிலும் உள்ளது. இது நாட்டின் வரலாற்றில் அவரது செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    கொண்டாட்டம்

    காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

    காந்தி ஜெயந்தி அன்று, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர், மற்ற முக்கிய பிரமுகர்களுடன், டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவர்.

    பல கல்வி நிறுவனங்கள் காந்தியின் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள், வினாடி வினாக்கள் மற்றும் கட்டுரை-எழுத்து போட்டிகளை ஏற்பாடு செய்கின்றன.

    கலை மற்றும் கைவினைக் கண்காட்சிகள் அவரது வாழ்க்கைப் பணிகளைக் காண்பிக்கும் பொதுவான நிகழ்வுகளாகும்.

    காந்தியின் தூய்மை மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் (தூய்மை இந்தியா மிஷன்) ஆகியவற்றின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக தூய்மை இயக்கங்களில் ஈடுபடுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஐநா சபை
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    செயற்கை நுண்ணறிவை ஆசிரியர்களாக களமிறக்கும் இந்தியாவின் முதல் ஐஐஎம் என்ற சாதனை படைத்த ஐஐஎம் சம்பல்பூர் செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை; அடுத்த புயலைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.என்.ரவி
    தர சோதனையில் தோல்வியடைந்த பிரபல பாராசிட்டமால் மற்றும் 52 மருந்துகள் இந்தியா
    விடுதலையாகிறார் செந்தில் பாலாஜி; ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி

    ஐநா சபை

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? இந்தியா
    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்
    ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா இஸ்ரேல்
    அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது இஸ்ரேல்

    உலக செய்திகள்

    உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு தென்னாப்பிரிக்கா
    பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம் இந்தியா
    ஏலியன்களின் உயிர் மாதிரிகளை அமெரிக்கா கண்டெடுத்ததாக முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல் அமெரிக்கா
    அலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025